விபத்துக்குள்ளான லாரி மீது கார் பயங்கர மோதல்: ஓட்டுநர் காயம், உயிர் தப்பிய ஆட்சியர்
சேலம் அருகே திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சேலம்: திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு சென்ற கார் சேலம் தாசநாயக்கன்பட்டி அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் டிரைவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கார் மூலம் சேலம் வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருமணத்தை முடித்துக்கொண்டு இரவு சுமார் 9 மணி அளவில் சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி யில் இருந்து நாமக்கல் நோக்கி கார் சென்று கொண்டிருக்கும்போது தாசநாயக்கன்பட்டி அருகே நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி ஒன்று மழையின் காரணமாக விபத்துக்குள்ளாகி சேலம் நாமக்கல் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது
அப்போது மாவட்ட ஆட்சியரின் கார் எதிர்பாராதவிதமாக அந்த லாரி மீது பயங்கரமாக மோதியது இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது அப்போது காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு காயங்கள் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்
கார் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டது இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து உடனடியாக மற்றொரு கார் மூலம் மாவட்ட ஆட்சியரை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் காயமடைந்த கார் ஓட்டுனரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கொட்டும் மழையில் நிகழ்ந்த இந்த விபத்து சம்பவத்தால் அந்த பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் கார் விபத்துக்குள்ளாகி ஆட்சியர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications