முன்னெச்சரிக்கை பலகையும் இல்லை.. பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கொத்தனார் பலி
சிவகங்கை: சிவகங்கை அருகே பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கொத்தனார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
எந்தவித முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்ககள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (43). கொத்தனராக வேலை செய்து வந்தார். சிவகங்கையில் நடைபெறும் கட்டிடம் கட்டும் பணியில் வேலை செய்து வந்ததால் தினமும் திருப்பாச்செட்டியில் இருந்து சிவகங்கை வரை சேதுராமன் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தார். அந்த வகையில், நேற்று காலை வேலைக்கு சென்ற சேதுராமன், இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிவகங்கை - மதுரை நெடுஞ்சாலையில் பனையூர் என்ற இடத்துக்கு வந்த போது அங்கு பாலப்பணிக்காக தோண்டப்பட்டிருந்த பெரிய பள்ளத்தில் சேதுராமன் விழுந்தார். இதில் அங்கிருந்த கட்டுமானக் கம்பிகளில் அவரது உடலில் பல இடங்களில் கிழித்தது. இதில் வலி தாங்க முடியாமல் சேதுராமன் அலறினார். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரை மீட்க யாரும் வரவில்லை. இதனால் சிறிது சிறிதாக அவரது உயிர் பிரிந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை கட்டுமானப் பணிக்காக அங்கு வந்த தொழிலாளர்கள் சேதுராமனின் உடலை பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் உதவியுடன் சேதுராமனின் உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே, கொத்தனார் விழுந்து உயிரிழந்த பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்துக்கு அருகே எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இரவு நேரத்தில் அங்கு வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க ஒளிரும் பலகைகள் கூட அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுவே சேதுராமன் உயிரிழந்ததற்கு காரணம் என அவரது உறவினர்கள் கூறுகின்றனர். இதேபோல, மதுரை - தோண்டி நெடுஞ்சாலையில் ஏராளமான பாலப்பணிகள் நடைபெறுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்தவித எச்சரிக்கை பலகைகளும் அமைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே, இதுபோன்ற பணிகள் நடைபெறும் பள்ளங்களுக்கு முன்பு எச்சரிக்கை அறிவிப்பு பலகைள் மற்றும் இரவு நேரத்தில் ஒளிரும் பலகைகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications