Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாட் ஜிபிடியே அதிர்ந்துடுச்சு.. கணிதத்திலேயே மிக அபூர்வம்.. ரோஹித் சர்மாவால் இந்திய அணிக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் பைனல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

3 ஓவர்களுக்கு இந்திய அணி 11 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறது. இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (வி.கே.), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஆடி வருகின்றனர்.

Champions Trophy 2025

நியூசிலாந்து அணியில், வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ஓர்ர்கே ஆகியோர் ஆடி வருகின்றனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் டாஸ் தோல்வி அடைந்து உள்ளது. நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் 15 போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணி டாஸ் தோற்று உள்ளது. ஒரு காயின் டாஸை தொடர்ச்சியாக 15 முறை தோற்பது மிகவும் கடினம் ஆகும். ரோஹித் சர்மா டாஸ் தோற்றது இந்திய அணிக்கு சிக்கல் ஆகி உள்ளது.

இது கிரிக்கெட் உலகில் மட்டுமன்றி கணித உலகிலிலும் அபூர்வமான சம்பவம் ஆகும். இது தொடர்பாக சாட் ஜிபிடி தந்த கணித மெசேஜ் ஒன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஒரு காயின் டாஸை தொடர்ச்சியாக 15 முறை தோற்பது மிகவும் கடினம் ஆகும். காயின் டாஸ் ஒன்றில் தோற்க 50 சதவிகிதம் மட்டுமே சான்ஸ் உள்ளது. அதிலும் தொடர்ச்சியாக 15 முறை தோற்க இன்னும் கடினமான சூழல் வேண்டும்.

அதாவது

(0.5)15 = 1 32768 ≈ 0.0000305
எனவே, வரிசையாக 15 டாஸ்களை இழப்பதற்கான நிகழ்தகவு 0.00305% ஆகும், இது மிகவும் அரிதானது. என்று சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது.

பைனல்ஸ் போட்டியில் இந்திய அணிக்கு என்ன சாதகமாக உள்ளது

1. இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையின் எல்லா போட்டிகளையும் ஒரே இடத்தில் துபாயில் ஆடுகிறது. மற்ற அணிகள் துபாய் - பாகிஸ்தான் இடையே அடிக்கடி பயணம் செய்ய வேண்டி உள்ளது.

2. அதிலும் சில அணிகளுக்கு அடுத்த போட்டியை நாம் எங்கே ஆட போகிறோம்.. துபாயில் ஆட போகிறோமா.. பாகிஸ்தானில் ஆட போகிறோமா என்பதே தெரியாத நிலை உள்ளது.

3. இந்தியாவிற்கு பயணம் இல்லாததால் பயிற்சி எடுக்க நேரம் இருக்கிறது. ஆனால் மற்ற அணிகளுக்கு நேரம், ஓய்வு தேவைப்படுகிறது. ஆனால் அது கிடைப்பது இல்லை.

4. இந்திய அணி துபாய் பிட்ச் என்பதால் ஸ்பின் பவுலர்களை எடுத்துள்ளது. ஆனால் மற்ற அணிகள் பாகிஸ்தானை மனதில் வைத்து பாஸ்ட் பவுலர்களை எடுத்தது. அவர்களால் துபாயில் இந்திய அணியை சமாளிக்க முடியவில்லை.

5. இதெல்லாம் இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக மாறி உள்ளது. மற்ற அணிகளுக்கு எதிராக மாறி உள்ளது. இதைத்தான் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+