இலங்கை கலவரத்திற்கு என்ன காரணம்.. சிங்களர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்னதான் பிரச்சனை?
Recommended Video

கொழும்பு: இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 10 நாள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கண்டியில் இந்த கலவரம் நடக்கிறது.
ஆனால் கொழும்பில் இந்த கலவரத்திற்கான எந்த சுவடும் இல்லை. இலங்கை போரில் இருந்தே இஸ்லாமியர்களுக்கும், புத்த மத சிங்களர்களுக்கும் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது.
எத்தனை அரசுகள் மாறினாலும், பேச்சு வார்த்தை நடத்தினாலும் இந்த பிரச்சனை மட்டும் அந்த நாட்டில் தீராமல் தொடர்ந்து வருகிறது.

மத மாற்ற பிரச்சனை
பல வருடங்களுக்கு பிறகு இந்த பிரச்சனை மீண்டும் உருவாகி இருக்கிறது. இஸ்லாமிய மக்கள், அங்கு இருக்கும் புத்த மத மக்களை மதம் மாற்றுவதாக பிரச்சனை எழுந்தது. மேலும் புத்த விகாரங்களை சொந்தமான நிலங்களை அபாகரிப்பதாகவும், மசூதிகள் கட்டுவதாகவும் பிரச்சனை எழுந்து இருக்கிறது.

புத்த மத தாக்குதல்
இந்த நிலையில் புத்த மதத்தை சேர்ந்த சிலர் இஸ்லாமிய கட்டிட்டங்கள், மசூதிகள் மீது கடந்த 27ம் தேதி தாக்குதல் நடத்தினார்கள். கண்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இதில் பலர் மோசமாக காயம் அடைந்தார்கள்.

மரணம்
இந்த கலவரத்தில் இரண்டு பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பலர் காயம் காரணமாக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கலவரத்தை தொடங்கிய புத்த மத சிங்களர்கள்தான் என்று இஸ்லாமியர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

மசூதிகள்
இதில் மொத்தம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 75 கடைகள் கொளுத்தப்பட்டு இருக்கிறது. 32 வீடுகள் மோசமாக எரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் 10 மசூதிகள் இடிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருக்கிறது. இதையடுத்து கலவரம் பெரிதாகி இருக்கிறது.

இஸ்லாமியர்கள்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமியர்கள் நேற்று கலவரம் செய்தார்கள். ஆனால் நேற்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் போராட்டம் நிற்காத காரணத்தால் தற்போது 10 நாளாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும்
அங்கு தற்போது ராணுவம் இரக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் போராட்டம் நடக்கிறது. இதில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகளை விடுதலை செய்ய சொல்லி சக துறவிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications