இலங்கை கலவரத்திற்கு என்ன காரணம்.. சிங்களர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்னதான் பிரச்சனை?
Recommended Video

கொழும்பு: இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 10 நாள் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கண்டியில் இந்த கலவரம் நடக்கிறது.
ஆனால் கொழும்பில் இந்த கலவரத்திற்கான எந்த சுவடும் இல்லை. இலங்கை போரில் இருந்தே இஸ்லாமியர்களுக்கும், புத்த மத சிங்களர்களுக்கும் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது.
எத்தனை அரசுகள் மாறினாலும், பேச்சு வார்த்தை நடத்தினாலும் இந்த பிரச்சனை மட்டும் அந்த நாட்டில் தீராமல் தொடர்ந்து வருகிறது.

மத மாற்ற பிரச்சனை
பல வருடங்களுக்கு பிறகு இந்த பிரச்சனை மீண்டும் உருவாகி இருக்கிறது. இஸ்லாமிய மக்கள், அங்கு இருக்கும் புத்த மத மக்களை மதம் மாற்றுவதாக பிரச்சனை எழுந்தது. மேலும் புத்த விகாரங்களை சொந்தமான நிலங்களை அபாகரிப்பதாகவும், மசூதிகள் கட்டுவதாகவும் பிரச்சனை எழுந்து இருக்கிறது.

புத்த மத தாக்குதல்
இந்த நிலையில் புத்த மதத்தை சேர்ந்த சிலர் இஸ்லாமிய கட்டிட்டங்கள், மசூதிகள் மீது கடந்த 27ம் தேதி தாக்குதல் நடத்தினார்கள். கண்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இதில் பலர் மோசமாக காயம் அடைந்தார்கள்.

மரணம்
இந்த கலவரத்தில் இரண்டு பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பலர் காயம் காரணமாக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த கலவரத்தை தொடங்கிய புத்த மத சிங்களர்கள்தான் என்று இஸ்லாமியர்கள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள்.

மசூதிகள்
இதில் மொத்தம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான 75 கடைகள் கொளுத்தப்பட்டு இருக்கிறது. 32 வீடுகள் மோசமாக எரிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் 10 மசூதிகள் இடிக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் இருக்கிறது. இதையடுத்து கலவரம் பெரிதாகி இருக்கிறது.

இஸ்லாமியர்கள்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமியர்கள் நேற்று கலவரம் செய்தார்கள். ஆனால் நேற்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் போராட்டம் நிற்காத காரணத்தால் தற்போது 10 நாளாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும்
அங்கு தற்போது ராணுவம் இரக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் போராட்டம் நடக்கிறது. இதில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகளை விடுதலை செய்ய சொல்லி சக துறவிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த நிலையில் சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications