புதிய கட்சி... சுதந்திர கட்சியில் இருந்து ராஜபக்சே உட்பட 30 எம்பிக்கள் விரைவில் டிஸ்மிஸ்
கொழும்பு: புதிய அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உட்பட 30 எம்.பிக்களை டிஸ்மிஸ் செய்ய அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முடிவு செய்துள்ளது.
இலங்கை அதிபராக இருந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தம் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தார் மகிந்த ராஜபக்சே. ஆனால் அதிபர் தேர்தலின் போது அவரது சொந்த கட்சியின் பொதுச்செயலராக இருந்த மைத்ரிபால சிறிசேனவே அவருக்கு எதிராக களமிறங்கி வென்றார்.
இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சேவின் பிடியில் இருந்து சுதந்திர கட்சி நழுவியது. பெரும்பாலான நிர்வாகிகள் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தேசிய அரசு
பின்னர் நாடாளுமன்ற தேர்தலின் போது ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி- சுதந்திர கட்சி இணைந்து தேசிய அரசை அமைத்தது. இந்த அரசில் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இணையவில்லை. அவர்கள் தனி ஆவர்த்தனம் செய்து வந்தனர்.

பிளவுபடும் சுதந்திர கட்சி
இதனிடையே சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி தனி கட்சி தொடங்க மகிந்த ராஜபக்சேவும் அவரது ஆதரவாளர்களும் அண்மையில் முடிவு செய்தனர். இதனால் ஆளும் சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபடும் நிலை உருவாகி உள்ளது.

ராஜபக்சே டிஸ்மிஸ்?
இதனைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சே, அவரது ஆதரவு எம்.பி.க்கள் 30 பேரும் விரைவில் சுதந்திர கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் இரு அணிகளையும் ஒன்று சேர்க்கும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

சாதிக்குமா?
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திர கட்சி ஆகிய 2 சிங்கள கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும் வலிமை பெற்றவையாக இருந்து வருகின்றன. 3-வது பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்து வருகிறது. தற்போது ராஜபக்சே அணி உருவாக்கும் புதிய கட்சி, ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்சியாக இருக்குமா? அல்லது பத்தோடு பதினொன்றாக இருக்குமா? என்பது போகப் போக தெரிந்துவிடும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications