இலங்கை அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! விரைவில் முடிவுகள் வெளியாகும்!!
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மைத்ரிபால ஸ்ரீசேனவும் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 60%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன. சிங்களர் வாழும் பகுதிகளில் 70%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி இருந்தன.
மொத்தம் 72% வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்றைய அதிபர் தேர்தலில் பெரும் வன்முறை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் வன்முறை சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறை வெடித்தது.
வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இரவு 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரவு 10.30 மணியளவில் தபால் வாக்குகளில் மைத்ரிபால ஸ்ரீசேன 20 மாவட்டங்களில் முன்னிலை வகித்து வருவதாகவும் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இலங்கையில் வாக்குச் சீட்டு முறைதான் அமலில் இருப்பதால் விரைவில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications