பஸ்ஸில் வந்த அரிசி ஆலை அதிபரிடம் மயக்க பிஸ்கெட் கொடுத்து 1 லட்சம் ரூபாய் கொள்ளை!
சென்னை: சென்னை கோயம்பேட்டுக்கு பஸ்ஸில் வந்த தொழிலதிபர் ஒருவருக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்தது. பஸ் நின்றவுடன் பயணிகள் இறங்கினர். ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை.
தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து கண்டக்டர் நடராஜன் அவரை எழுப்ப முயன்றார். அப்போது அவர் மயங்கி கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகுமார் விரைந்து சென்று மயங்கி கிடந்த பயணியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலையில் அந்த பயணிக்கு மயக்கம் தெளிந்தது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மயங்கி கிடந்தவர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகிரெட்டி என்றும், அரிசி ஆலை நடத்தி வருகிறார் என்றும் தெரிய வந்தது.
செங்குன்றத்தில் உள்ள நபரை பார்க்க வந்துள்ளார். அப்போது தனது கைப்பையில் ரூபாய் 1 லட்சம் எடுத்து வந்தார். அவரின் பக்கத்தில் அமர்ந்த மர்ம நபர் நாகி ரெட்டிக்கு பிஸ்கட் கொடுத்து உள்ளார். அதை தின்றவுடன் நாகிரெட்டி மயக்கம் அடைந்தார்.
இதை பயன்படுத்தி மர்ம நபர் ரூபாய் 1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மாயமாகி விட்டார். அவர் பஸ்சில் இருந்து எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications