பஸ்ஸில் வந்த அரிசி ஆலை அதிபரிடம் மயக்க பிஸ்கெட் கொடுத்து 1 லட்சம் ரூபாய் கொள்ளை!
சென்னை: சென்னை கோயம்பேட்டுக்கு பஸ்ஸில் வந்த தொழிலதிபர் ஒருவருக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்தது. பஸ் நின்றவுடன் பயணிகள் இறங்கினர். ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை.
தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து கண்டக்டர் நடராஜன் அவரை எழுப்ப முயன்றார். அப்போது அவர் மயங்கி கிடப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அரிகுமார் விரைந்து சென்று மயங்கி கிடந்த பயணியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலையில் அந்த பயணிக்கு மயக்கம் தெளிந்தது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மயங்கி கிடந்தவர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த நாகிரெட்டி என்றும், அரிசி ஆலை நடத்தி வருகிறார் என்றும் தெரிய வந்தது.
செங்குன்றத்தில் உள்ள நபரை பார்க்க வந்துள்ளார். அப்போது தனது கைப்பையில் ரூபாய் 1 லட்சம் எடுத்து வந்தார். அவரின் பக்கத்தில் அமர்ந்த மர்ம நபர் நாகி ரெட்டிக்கு பிஸ்கட் கொடுத்து உள்ளார். அதை தின்றவுடன் நாகிரெட்டி மயக்கம் அடைந்தார்.
இதை பயன்படுத்தி மர்ம நபர் ரூபாய் 1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மாயமாகி விட்டார். அவர் பஸ்சில் இருந்து எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications