அங்க டெல்லியில் பேச்சுவார்த்தை! இங்க நடுக்கடலில் இலங்கை மீண்டும் அட்டூழியம்- 10 மீனவர்கள் கைது!
டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் 10 தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது இலங்கை கடற்படை.
சென்னை: டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் நடுக்கடலில் 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படையின் 30 ஆண்டுகால அட்டூழியத்துக்கும் படுகொலைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்வதை இலங்கை கடற்படை நிறுத்தி வைத்தது.

அண்மையில் 22 வயது ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை சுட்டுப் படுகொலை செய்தது. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் தமிழக மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இப்படி மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி சென்ற நிலையில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது.
கச்சத்தீவு அருகே பழுதாகி நின்ற ஜஸ்டின் என்பவருக்குச் சொந்தமான படகில் இருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி கைது செய்துள்ளது. இது தமிழக மீனவர்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications