முடிந்தது வேட்புமனுத் தாக்கல்... தமிழகம், புதுவையில் 1359 பேர் மனுத்தாக்கல்
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு சுமார் 1,359 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நாளை தொடங்கி மொத்தம் 9 கட்டங்களாக வரும் மே 12ம் தேதி வரை நடைபெற உள்ளது 16வது லோக்சபா தேர்தல். இதில் தமிழகம் மற்றும் புதுவைக்கு ஒரே நாளில் வருகிற 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே, காலியாக உள்ள ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
மொத்தம் 543 உறுப்பினர்களை கொண்டது லோக்சபா. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 40 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நேற்றோடு முடிந்த வேட்புமனுத் தாக்கலின் படி, இந்த 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து சுமார் 1359 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல்....
லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. விடுமுறை நாட்களான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (தெலுங்கு வருடப்பிறப்பு) ஆகிய இரு நாட்கள் தவிர மற்ற நாட்களில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

கடைசி நாளில் மட்டும் 560 பேர்....
நேற்று முன்தினம் வரை 758 வேட்பாளர்கள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்று மட்டும் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 560 பேர் மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் மட்டும்....
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்தது மனுத்தாக்கல். இறுதி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 1,318 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

இரண்டு திருநங்கைகள்...
இவர்களில் 1,198 பேர் ஆண்கள். 118 பேர் பெண்கள். 2 பேர் திருநங்கைகள் ஆவர். புதுச்சேரியில் மட்டும் சுமார் 41 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

நாளை பரிசீலனை...
இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அப்போது தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

வாபஸ் பெற கடைசிநாள்...
அதேபோல், போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற வரும் 9-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இறுதிப்பட்டியல்...
அன்று மாலை 3 மணிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தொகுதி வாரியாக வெளியிடப்படும்.

ஓட்டு எண்ணிக்கை...
அதன்பிறகு 24-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். மே 16-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications