144 தடை விதித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? வேல்முருகன் நறுக்
144 தடை ஆணை பிறப்பித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: 144 தடை ஆணை பிறப்பித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி விஎச்பியின் ராமராஜ்ய ரத யாத்திரை இன்று தமிழகம் வந்தடைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் ரத யாத்திரை குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், ஒற்றுமையை சீர்குலைக்கவே ரத யாத்திரை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
144 தடை ஆணை பிறப்பித்துவிட்டு ரத யாத்திரைக்கு அனுமதிப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பிய அவர், அரசியல் சட்டத்தை அனைவருக்கும் பொதுவாக பயன்படுத்த வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்த வேல்முருகன், அத்வானி நடத்திய ரத யாத்திரை நாட்டின் பன்முகத்தன்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தியது என்றும் கூறினார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications