சேலம் அருகே ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம்.. 3 ஓட்டுநர்களை மடக்கிப் பிடித்த மக்கள்!
சேலம் அருகே ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: ஓமலூர் அருகே ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிஅயை பலாத்காரம் செய்த 3 ஓட்டுநர்களை பிடித்து பொதுமக்களே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 15வயது சிறுமி ஒருவர் தனியார் பேருந்தில் நாரணம்பாளையத்துக்கு சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்தில் மூன்று ஓட்டுநர்களை தவிர வேறு யாரும் இல்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் பேருந்தில் இருந்த 3 ஓட்டுநர்கள் சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நாரணம்பாளையத்தில் சிறுமி அழுதுகொண்டே இறங்குவதைக் கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர்.
மூன்று கொடூரர்கள்
அப்போது சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து பேருந்தை மறித்த பொதுமக்கள் மணிவண்ணன், பெருமாள், முருகன் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைதானவர்களிடம் விசாரணை
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் சிறுமி மூன்று ஓட்டுநர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்திலும் அரங்கேறிய கொடூரம்
இதில் தொடர்புடைய 4 பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் தமிழகத்திலும் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.