சேலம் அருகே ஓடும் பேருந்தில் சிறுமி பலாத்காரம்.. 3 ஓட்டுநர்களை மடக்கிப் பிடித்த மக்கள்!
சேலம் அருகே ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: ஓமலூர் அருகே ஓடும் பேருந்தில் 15 வயது சிறுமி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிஅயை பலாத்காரம் செய்த 3 ஓட்டுநர்களை பிடித்து பொதுமக்களே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 15வயது சிறுமி ஒருவர் தனியார் பேருந்தில் நாரணம்பாளையத்துக்கு சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்தில் மூன்று ஓட்டுநர்களை தவிர வேறு யாரும் இல்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் பேருந்தில் இருந்த 3 ஓட்டுநர்கள் சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நாரணம்பாளையத்தில் சிறுமி அழுதுகொண்டே இறங்குவதைக் கண்ட பொதுமக்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர்.

மூன்று கொடூரர்கள்
அப்போது சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து பேருந்தை மறித்த பொதுமக்கள் மணிவண்ணன், பெருமாள், முருகன் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைதானவர்களிடம் விசாரணை
இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் சிறுமி மூன்று ஓட்டுநர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி
கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்திலும் அரங்கேறிய கொடூரம்
இதில் தொடர்புடைய 4 பேருக்கு உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில் தமிழகத்திலும் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications