தீபாவளி... பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட 19 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அனுமதி (பெர்மிட்) இல்லாமல் இயக்கப்பட்ட 19 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக மக்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு அலை அலையாக போய்க் கொண்டுள்ளனர்.

இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணங்கள் வசூலித்து விடாமல் இருக்க, போக்குவரத்து துறை தனிப்படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது.
சென்னையில் 6 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோயம்பேடு, அரும்பாக்கம், பெருங்களத்தூர், எழும்பூர் ஆகிய இடங்களில் ஆம்னி பேருந்துகளை சோதனை செய்தனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், 19 பேருந்துகள் அனுமதி இன்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்துகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதன் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து ஆம்னி பஸ்கள் மீதான சோதனை நடந்து வருகிறது.
இதேபோல், தீபாவளி முடிந்து நாளை மறுதினம் (11-ம் தேதி) சென்னை திரும்பும் ஆம்னி பேருந்துகளையும் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். சென்னையை சுற்றியுள்ள சுங்க சாவடிகளில் இந்த சோதனையை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள 24794709 எண்ணிலும், போக்குவரத்து இணை ஆணையர் அலுவலக எண்கள் 044-26744445, 24749001 ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications