சென்னை 11 மாடி கட்டிட விபத்து: 60 மணி நேரத்திற்குப் பின் மூவர் உயிருடன் மீட்பு
சென்னை: சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமான இடத்தில் இருந்து நான்கு நாட்களுக்கு பின் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கடந்த சனிக்கிழமையன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்புக்குழுவினர் தீவிரம்
சென்னை காவல்துறை, தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினை சேர்ந்த 400-க்கு மேற்பட்டவர்கள் அடங்கிய 10 மீட்புக் குழுக்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

உயிருடன் மீட்பு
இந்நிலையில், இன்று காலை கட்டிட இடிபாடுகளில் இருந்து ஆந்திராவை சேர்ந்த மகேஷ் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், தன்னுடைய மனைவியும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கூறினார். அவர் உயிருடன் இருப்பதாகவும், அவரை உடனடியாக மீட்கவேண்டும் என்று கூறிவிட்டு மயக்கமடைந்துவிட்டார்.

மேலும் இருவர் மீட்பு
மேலும் தமிழகத்தை சேர்ந்த செந்தில், ஆந்திராவை சேர்ந்த அனுசூர்யா ஆகியோர் பேரிடர் மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கபட்டனர். இன்னும் 30-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

24 பேர் உயிருடன் மீட்பு
இதுவரை 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் அனைவரையும் முழுமையாக மீட்கும் வரை மீட்பு பணிகள் நிறுத்தப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications