கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் தயாரிப்பு
நெல்லை: கூடங்குளத்தில் உள்ள முதல் அணு உலையில் இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அணு மின் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கு 2 அணு உலைகள் அமைக்கப்பட்டது. அதில் முதல் அணு உலையில் மின் உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலைய முதல் உலையில் இருந்து இதுவரை 300 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளோம். 300 கோடி யூனிட் மின்சாரத்தில் 50 சதவீத மின்சாரம் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி மூலம் இதுவரை ரூ.366 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் அணு மின் நிலையத்தை சுற்றியுள்ள ஊர்களின் வளர்ச்சிக்கு என்று ரூ.165 கோடி அளிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியான மின் உற்பத்தி சில வாரங்களில் துவங்கப்பட உள்ளது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications