தூத்துக்குடி அருகே மாயமான 4 மீனவர்களும் பத்திரமாக மீட்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற போது மாயமான 4 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர் அந்தோணியர் கோவில் தெருவைச் சேர்ந்த கவாஸ்கர், விஜயபாஸ்கர், செல்வின், வாசு ஆகிய 4 பேரும் ஒரு பைபர் படகில் கண்வாய் மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு அவர்கள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இன்று அதிகாலை வரை மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களை தேடி மற்ற சக மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.
இந்த நிலையில், மாயமான மீனவர்கள் 4பேரையும் கூந்தன்குழி பகுதி மீனவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனையடுத்து திருச்செந்தூர் அருகேயுள்ள அமலிநகர் பகுதி மீனவர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை கண்ணீர்மல்க கட்டி அணைத்து வரவேற்றனர்.
படகு பழுதின் காரணமாக மீனவர்கள் திசைமாறியுள்ளனர், படகில் பாய்மரமும் இல்லாத காரணத்தினாலே இந்த வழிமாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னாக தகவல் கேள்விப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட மீனவ குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராமேஸ்வரம் மீனவர்கள்'ஸ்டிரைக்
இதற்கிடையே, ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கள் போராட்டத்தைதொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து, பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள், 18 பேர், டிச., 29ல், மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்த இவர்களை, இலங்கை கடற்படையினர் பிடித்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி, டிச., 31 முதல், படகுகளில் கருப்புக்கொடி கட்டி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில், மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications