ஜல்லிக்கட்டு வன்முறை.. போலீசுக்கு எதிராக சென்னையில் 515 புகார்கள்.. நீதிபதி ராஜேஷ்வரன் தகவல்
ஜல்லிக்கட்டு வன்முறையில் போலீசுக்கு எதிராக சென்னையில் அதிக அளவில் 515 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணைக் குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: மெரினா கலவரம் குறித்து சென்னையில் 515 புகார்கள் போலீசாருக்கு எதிராக வந்துள்ளதாக விசாரணைக் குழுவின் தலைவர் ராஜேஷ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தில் போலீசாரே குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.
இதனையடுத்து, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

4 மாதம் கால அவகாசம்
இந்த விசாரணை குறித்து நீதிபதி ராஜேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதால் விசாரித்து முடிக்க கூடுதலாக 4 மாதம் தேவைப்படுகிறது. கால அவகாசம் தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

சென்னையில் போலீசுக்கு எதிராக 515 புகார்
ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து இதுவரை 1,949 பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிக அளவில் சென்னையில் இருந்து 515 புகார்கள் போலீசாருக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ளன.

கோவையில் விசாரணை
அடுத்த மாதம் 16 மற்றும் 17ம் தேதி கோவையில் ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை நடைபெற உள்ளது. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து குற்றச்சாட்டுகளை முன் வைக்கலாம்.

மதுரை, சேலத்தில் விரைவில்
அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் சேலத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இங்கெல்லாம் விரிவான விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கமிஷன் தலைவர் ராஜேஷ்வரன் கூறினார்.

கால தாமதம்
ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து முழு விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், விசாரித்து முடிக்க மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளதால் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications