இப்பவே 86% நோட்டுக்களை மாற்றியாச்சு.. அவசரப்பட்டு வங்கிகளுக்கு படையெடுக்காதீர்: ஜேட்லி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 86 சதவீத பழைய நோட்டுக்கள் மாற்றப்பட்டுவிட்டதாக கூறியுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அனைவரும் ஒரே நேரத்தில் வங்கிக்கு விரைய வேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆர்.பி.ஐ அதிகாரிகளுடன், ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து இன்று ஆலோசனை நடத்திய அருண் ஜேட்லி, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: சில வகை ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஏற்று வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துவரும் பொதுமக்களையும், அலுக்காமல் பணியாற்றும் வங்கி ஊழியர்களையும் பாராட்டி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

86% currency is changed, says Finance Minister Arun Jaitley

பண புழக்கம் சீரடைகிறதா என்பதை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இன்று மதியம் 12.15 மணி நிலவரப்படி எஸ்.பி.ஐ வங்கியில் மட்டும் 58 லட்சம் மக்கள், நோட்டுகளை மாற்றியுள்ளனர். கடந்த சில நாட்களாக மக்கள் பெருமளவில் நோட்டுக்களை மாற்ற ஆர்வம் காட்டினர். சுமார் 86 சதவீத மக்கள் நோட்டுக்களை மாற்றியுள்ளனர். இதனால்தான் வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இனிமேல் குறையத்தொடங்கும். பணம் கையிருப்பு உள்ளவர்கள், டெபிட், கிரெடிட் கார்டு உள்ளவர்கள் அவசரப்பட்டு வங்கிக்கு சென்று பழைய ரூபாய் தாள்களை டெபாசிட் செய்ய வேண்டாம்.

வரும் டிசம்பர் 30ம் தேதிவரை கால அவகாசம் தரப்பட்டுள்ளதால், பொறுமையாக வங்கிக்கு செல்லவும். இதனால் கூட்டம் குறையும். புதியவகை ரூ.2000 நோட்டுக்களை வழங்குவதற்கு ஏற்ப ஏடிஎம்களில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால்தான் வினியோகத்தில் தாமதம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+