நீட் தேர்வு:நாம் தமிழர் கட்சியின் நாளைய கருத்தரங்கில் ரவீந்தரநாத், கஜேந்திரபாபு, சபரிமாலா பங்கேற்பு
நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா என்பது குறித்து மாபெரும் கருத்தரங்கம் நாளை நாம் தமிழர் கட்சியினரால் நடத்தப்படுகிறது.
சென்னை: நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா என்பது குறித்து நாளை நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் மாபெரும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறை நடத்தும் "நீட் தேர்வினால் மருத்துவக் கல்வியின் தரம் உயருமா?" எனும் தலைப்பிலான மாநிலம் தழுவிய மாபெரும் கருத்தரங்கு நாளை செப்டம்பர் 18 அன்று மாலை 3 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

இதில் மருத்துவத்துறை சார்ந்த பேரறிஞர்களும், அறிவுசார் பெருமக்களும் பங்கேற்று தனது கருத்துரைகளை வழங்கவிருக்கிறார்கள். இதில் மருத்துவர் இரவீந்தரநாத், தொழில்நுட்ப அறிவுரைஞர் பொன்ராஜ், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் தாயப்பன், மருத்துவர் இளவஞ்சி, மருத்துவர் ம.மதிவாணன், சமூகச் செயற்பாட்டாளர், நடிகை கஸ்தூரி, சமூகப் போராளி சபரிமாலா, ஆகியோருடன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொள்கிறார்.

இடம்: அண்ணா கலையரங்கம், சுவாமி சிவானந்தா சாலை, தூர்தர்சன் (சென்னை) தொலைக்காட்சி எதிரில், சேப்பாக்கம், சென்னை.
தாத்தா இரட்டை மலை சீனிவாசனார் நினைவு தினம்:
இதேபோல் நாளை தாத்தா இரட்டை மலை சீனிவாசனாரின் நினைவு தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் சீமான் கலந்து கொள்கிறார். காலை 10 மணிக்கு சென்னை, காந்தி மண்டபத்திலுள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவிட திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார்
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications