போராடும் தம்பி, தங்கைகள்தான் உண்மையான வீரர்கள்... ஒரு மாடு பிடி வீரரின் உணர்ச்சிப் பேச்சு!
களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிற தம்பி, தங்கைகள்தான் உண்மையான வீரர்கள் என்று முன்னாள் மாடுபிடி வீரர் ஒருவர் உணர்ச்சிகரமாக கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டைக் காப்பாற்ற களத்தில் இறங்கிப் போராடும் தம்பி தங்கைகள்தான் உண்மையான வீரர்கள் என்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாடு பிடி வீரரான துரைப்பாண்டி கணேசன் உணர்ச்சிப் பொங்க கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக இது நாள் வரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதி மக்கள்தான் போராடி வந்தனர். ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழகமே களத்தில் குதித்து விட்டது.

அது மட்டுமா.. உலக அளவிலும் ஜல்லிக்கட்டை ஆதரித்து தமிழர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் போராடிக் கொண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தைத் தாண்டி போயிராத ஜல்லிக்கட்டை உலகளவில் கொண்டு போய் விட்டது மத்திய அரசின் பிடிவாதமும், பீட்டாவின் திமிர்த்தனமும்.
மக்கள் வெகுண்டெழுவார்கள்.. குறிப்பாக இளைஞர்கள் தங்களது கலாச்சாரத்தைக் காக்க திரண்டெழுவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. இது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடு பிடி வீரரும், தற்போது சிங்கப்பூரில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவருமான துரைப்பாண்டி கணேசன், ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவ, மாணவியருக்கும் நன்றி கூறியுள்ளார். அவர்கள்தான் உண்மையான வீரர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
அவரது பேச்சு அடங்கிய வீடியோ:
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications