திரும்பி வராத புதிய ரூபாய் நோட்டுகள்: சிக்கலோ சிக்கல்
நெல்லை: வங்கிகளில் இருந்து வினியோகம் செய்யப்பட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மறு சுழற்சிக்கு திரும்பி வராததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். மறுநாள் வங்கிகள் மூடப்பட்டன. 10ம் தேதி முதல் வங்கிகள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டது. துவக்கத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்றவர்களுக்கு 4 ஆயிரமும், பின்னர் 4,500ம், கடைசியாக 2000ம் வழங்கப்பட்டது.

வங்கிகளை பொறுத்தவரை கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 10 ஆயிரம் எடுக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் போதிய 100 ரூபாய் நோட்டுகள் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் இந்த நோட்டுகளுக்கு சில்லறை கிடைக்காமல் பொதுமக்களும், வியாபாரிகளும் திண்டாடினர். அதே நேரத்தில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் வினியோகிக்கப்பட்ட போதிலும் மறு சுழற்சிக்கு மீண்டும் வங்கிக்கு வருவது குறைந்துள்ளது.
700 கோடி அளவிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வந்த போதிலும் அவை அனைத்தும் வங்கிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த பணம் மீண்டும் வங்கி பரிவர்த்தனைக்கு வருவது குறைந்துள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று கொண்டு அதே அளவுக்கு பழைய 100 ரூபாய் அல்லது புதிய 500 ரூபாய் வந்திருந்தால் வினியோகம் செய்யலாம் என தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கி பரிவர்த்தனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications