சென்னையில் 2வது மாடியிலிருந்து கீழே விழுந்த குழந்தை பலி.. தாயின் இடுப்பிலிருந்தபோது நேர்ந்த சோகம்
சென்னையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: மாம்பலத்தில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் துணிக்காய வைத்தபோது இடுப்பில் இருந்து நழுவிய குழந்தை 2 வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தது.
சென்னை மாம்பலம் துக்காராம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் முத்துராஜ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
இவர்கள் வீட்டின் 2வது மாடியில் வசித்து வந்தனர். இன்று கண்ணன் வேலைக்கு சென்றதும் மகேஸ்வரி வழக்கம்போல் வீட்டு வேலைகளை செய்துள்ளார்.

திமிறி விழுந்த குழந்தை
துணிகளை துவைத்த மகேஸ்வரி, மகன் முத்துராஜை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு அவற்றை காயப்போட்டுள்ளார். சுவர் ஓரம் நின்று அவர் துணியை காயப்போட்டப்போது இடுப்பில் இருந்து திமிறிய குழந்தை எதிர்பாராதவிதமாக இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்தான்.

தலையில் பலத்த காயம்
இதில் குழந்தை முத்துராஜ் தலையில் பலத்த காயமடைந்தான். இதனை சற்றும் எதிர்பாராத மகேஸ்வரி அலறியடித்துக்கொண்டு கீழே ஓடினார்.

தீவிர சிகிச்சை
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சென்னை எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

பரிதாபமாக பலி
இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி குழந்தை முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கதறிய தாய்
இரண்டாவது மாடியில் இருந்து குழந்தை நழுவி கீழே விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை பறிகொடுத்துவிட்டு தாய் மகேஸ்வரி கதறிய காட்சி துயரத்தில் ஆழ்த்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications