கனியாமூர் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்.. ‛முக்கிய’ காரணத்தை கூறி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.இதுதொடர்பாக நடந்த போராட்டம் வன்முறையானது.

கைது நடவடிக்கை
பள்ளிக்குள் நுழைந்தவர்கள் வாகனங்களை அடித்து நொறுங்கி தீவைத்தனர். மேலும் சான்றிதழ்களை சூறையாடினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரித்து கலவரம் தொடர்பாக ஏராளமானவர்களை கைது செய்தனர். மேலும் மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகள்
கலவரத்தின் போது சேதமடைந்த பள்ளி சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் ஜடாவத் அனுமதி அளித்த நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக ஏற்கனவே 2 ஆண்டுகள் வரை ஆன்லைன் வகுப்புகள் நடந்த நிலையில் தற்போதைய கலவரத்தால் அந்த பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தற்போதும் நடக்கிறது.

பிற பள்ளியில் சேர்க்க..
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மாணவிகளின் கல்வியை பாதிக்கும் என கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பெற்றோர்கள் விரும்பினால் அருகில் உள்ள பள்ளிகளில் அந்த மாணவர்களை சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்படும். பெற்றோர்- ஆசிரியர் கழகத்தின் கருத்துகளை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பொதுநல மனுத்தாக்கல்
இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எம்எல் ரவி என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், ‛‛வன்முறைக்கு உள்ளான பள்ளியில் படித்த குழந்தைகளை பிற பள்ளிகளில் சேர்க்க மறுக்கின்றனர். இதனால் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும்'' என்பன போன்ற விபரங்கள் உள்ளன. இந்த மனு அடுத்தவாரம் விசாரணை வர உள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications