தோப்புக்கரணம் போட்டாக்கூட அதிமுக, திமுக ஜெயிக்க முடியாது... ப.சிதம்பரம்
சிவகங்கை : தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் தோப்புக்கரணம் போட்டால்கூட இத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தனது மகனும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கார்த்திக் ப.சிதம்பரத்தை ஆதரித்து திருமயம் ஒன்றியம் மனைப்பட்டி ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
இன்றைக்கு நடைபெறும் தேர்தல், மத்தியில் யார் அரசை அமைப்பது என்பது குறித்து நடைபெறும் தேர்தல் ஆகும். இது மத்திய அரசை நிர்ணயம் செய்வது. காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு இடையே நடக்கும் போட்டியாகும். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையே நடைபெறும் போட்டி அல்ல. சட்டசபைக்கு நடக்கும் போட்டியானால் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்குமான போட்டி என்று சொல்லலாம்.

தமிழகத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகள் தோப்புக்கரணம் போட்டால்கூட வெற்றி பெற முடியாது. இந்த இரண்டு கட்சிகளுக்கு போடும் ஓட்டு செல்லாத ஓட்டுகள்தான்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த திட்டத்திற்கு பாதுகாவலனாக விளங்கும். பருவ மழை பொய்த்த இந்த காலத்தில் இந்த திட்டம் தான் மக்களுக்கு ஜீவாதாரமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே 100 நாள் வேலை திட்டத்திற்கு ஊதியம் ரூ.167ஐ தர முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார்கள்.
இவ்வாறு சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications