சட்டசபையில் அதிமுக, திமுக, மக்கள் பிரச்சனையை பேசவில்லை... யார் வல்லவர் என வாக்குவாதம் - தமிழிசை
திண்டுக்கல்: சட்டசபைக் கூட்டத்தொடரில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குறைகூறி பேசி வருகிறார்கள் என்றும், பொதுமக்கள் பிரச்சனைக்காக அவர்கள் எதுவும் பேசவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் பழனியில் இன்று தொங்கியது. இரண்டு நாட்கள் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பழனி வந்தார்.
அப்போது தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பாஜக பலம் பொருந்திய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெறும். சட்டசபைக் கூட்டத் தொடரில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை சுமத்தி குறைகூறி வருகின்றனர். இருகட்சிகளுமே பேச்சில் யார் வல்லவர் என்று வாக்குவாதம் செய்கிறார்கள். பொதுமக்களின் பிரச்சனைக்காக இரு கட்சிகளும் எதுவும் பேசவில்லை என்பது கண்டணத்திற்குரியது என்று அவர் கூறினார்.