ஜனாதிபதி தேர்தலில் காங். வேட்பாளரை அதிமுக ஆதரிக்க வேண்டும்: நாஞ்சில் சம்பத் 'ஒரே போடு'
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை அதிமுக ஆதரிக்க வேண்டும் என தினகரன் கோஷ்டியின் நாஞ்சில் சம்பத் ஒரே போடாக போட்டிருக்கிறார்.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரைத்தான் அதிமுக ஆதரிக்க வேண்டும்; அதுதான் சரியானதும் கூட என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் அதிரடி காட்டியுள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகள் பாஜகவை ஆதரிப்பதில் போட்டி போட்டு சரணடைகின்றன. ஆனால் தினகரன் கோஷ்டியோ டெல்லி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறது.

பாஜகவுக்கு எதிர்ப்பு
சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் தலையெடுத்துவிடக் கூடாது; ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிடக் கூடாது என்பதில் டெல்லி கங்கணம் கட்டி செயல்படுகிறது என்பது இந்த கோஷ்டியின் குற்றச்சாட்டு. இதையே பொதுக்கூட்டங்களிலும் நாஞ்சில் சம்பத்தும் பேசிவருகிறார்.

ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் ஆதரவு உங்களுக்குத்தான் என டெல்லியில் வலிய சென்று இரு கோஷ்டிகளும் வாக்குறுதி தந்து வருகின்றனர். ஆனால் இதற்கு தினகரன் கோஷ்டியின் நாஞ்சில் சம்பத் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

ஆர்எஸ்எஸ் நபருக்கு நோ ஆதரவு
ஜனாதிபதி தேர்தலில் ஆர்எஸ்எஸ் சித்தாந்த்தை பின்பற்றும் ஒருவரை பாஜக வேட்பாளராக முன் நிறுத்தினால் உங்கள் நிலைப்பாடு என்ன என புதிய தலைமுறையின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத், ஆர்.எஸ்.எஸ். வேட்பாளரை அதிமுக ஆதரிக்கக் கூடாது என்றார்.

காங். வேட்பாளருக்கு ஆதரவு
அப்படியானால் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. ஆம் காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளரை ஆதரித்துதான் யதார்த்தமானது சரியானதும் என அதிரடியாக கூறியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications