சசிகலா கொடுத்த ரூ2 கோடி லஞ்சம்... கருத்து தெரிவிக்க ஓபிஎஸ் மறுப்பு- வீடியோ
பரப்பன அக்ரஹாரா சிறையில், சிறப்பு சலுகைகளுக்காக லஞ்சம் கொடுத்த வழக்கு விசாரணையில் இருப்பதால் தான் கருத்து சொல்ல இயலாது என முன்னாள் முதல்வர் ஒபிஎஸ் கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து தரப்பட்டது குறித்து கர்நாடக அரசு கமிஷன் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதால் கருத்து சொல்ல இயலாது என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சசிகலாவுக்கு கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதற்கு சசிகலா சிறைத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு 2 கோடி லஞ்சம் கொடுத்தார் என்பது தொடர்பாக கேள்விகள் கேடகப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம் கர்நாடக அரசு விசாரணை கமிஷன் அமைத்து, சசிகலா லஞ்சம் கொடுத்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆகையால் நான் இதுகுறித்து கருத்து சொல்ல இயலாது என கூறினார்.












Click it and Unblock the Notifications