எடப்பாடியின் அடுத்தடுத்த அதிரடிகளால் ஆடிப்போயுள்ள தினகரன் தரப்பு! இன்னும் இருக்கிறதாம் திருப்பங்கள்
Recommended Video

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் அடுத்தடுத்த அதிரடிகளால் ஆடிப்போயுள்ளது டிடிவி தினகரன் தரப்பு. "ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அசைக்க முடியாது" என முதல்வர் அதிமுக பொதுக்குழு மேடையில் முஷ்டி முறுக்கிய நிலையில் இன்னும் பல அதிரடிகள் காத்திருப்பதாக கண் சிமிட்டுகிறார்கள் எடப்பாடி வட்டாரத்தில்.
பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகள், கருணாநிதி போன்ற ஒரு ஆளுமையின் வயோதிகம், மத்திய அரசின் பரிபூரண ஆசிர்வாதம்.. போன்ற தங்களுக்கு ஏற்ற இத்தனை வாய்ப்புகளையும் கோட்டைவிட்டுவிட்டு ஆட்சியை இழக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும், அரசியல் அரிச்சுவடி அறியாதவர் இல்லை.
சாதாரண தொண்டனாக கட்சிக்குள் அடியெடுத்து வைத்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய வட்டத்திற்குள் வந்து, பவர்புல் அமைச்சராகி, பிறகு சசிகலா நம்பிக்கையையும் பெற்று முதல்வருமான எடப்பாடியை, அப்படி எளிதில் யாரும் நினைத்துவிட முடியாது.

அமைதி சாதனை
பன்னீர்செல்வம் போல வெளிப்படையாக எந்த சவாலையும் தெரிவிக்காமல், உள்ளேயே இருந்து தனது கரங்களை வலுப்படுத்தி முதல்வர் நாற்காலியில் இருக்கமாக அமர்ந்துள்ள எடப்பாடியை, அவ்வளவு எளிதில் தினகரன் அசைத்துவிட முடியாது என்கிறது கள நிலவரம். வாராது வந்த மாமணியாய் கையில் கிடைத்துள்ள இந்த ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி எந்த எல்லைக்கும் செல்ல கூடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஒரே அடியில் காலி
பதவி என்று ஒன்று இருப்பதால்தானே, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முடிகிறது என்று கருதிதான், பொதுக்குழுவை கூட்டி தினகரன், சசிகலா என எதிர்முகாம்களின் பதவிகள் அத்தனையையும் காலி செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. முன்னதாக தினகரன் தரப்பு எதிர்ப்புக்கு நடுவே பன்னீர்செல்வம் அணியை ஆட்சியில் இணைத்துவிட்டார்.

முதல்வர் வார்னிங்
பொதுக்குழுவில் பேசிய முதல்வர், "ஆயிரம் தினகரன்கள் வந்தாலும், கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது" என்ற தொனியில் பேசி நிர்வாகிகள் கரகோசத்தை வாங்கியுள்ளார். ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்று தினகரன் நேற்று இரவு அவசரமாக ஒரு எச்சரிக்கையை விடுத்த நிலையில், முதல்வரின் பதிலடி முக்கியத்துவம் பெற்றது.

எல்லாம் பக்கா
இந்த நிலையில்தான், திடீரென குடகு மாவட்டத்தில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு தமிழக போலீசார் விரைந்துள்ளனர். கட்சி எங்கள் பக்கம், வருவோர் இப்போவே வரலாம் என்ற சமிக்ஞைதான் எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இப்படி அனைத்து வகைகளிலும் தினகரனுக்கு செக் வைத்தபடி உள்ளார் முதல்வர். இதில் கவனிக்க வேண்டியது, தினகரனே நினைத்தாலும் ஆட்சியை கவிழ்க்கவிடாதபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாம். அது என்ன என்று கேட்டால், பொறுத்திருந்து பாருங்கள் என்று கண் சிமிட்டுகிறார்கள் எடப்பாடி தரப்பில்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications