கேரள சம்பவம் எதிரொலி... தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க தடை வருமா?
சென்னை: கேரளாவில் கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணிகள் உறுதியாகிவிட்ட நிலையில், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 9ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதேபோன்று மற்ற கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

கேரள கோவில் தீ விபத்து...
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் கோயிலில் வாணவேடிக்கை திருவிழாவின் போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தடை கோரிக்கை...
பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வரவேற்பு...
தேர்தல் பிரச்சாரங்களின் போது, தலைவர்களையும், வேட்பாளர்களையும் வரவேற்க, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். ஆனால், கேரள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் பாதுகாப்பு...
எனவே, மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்...
அதோடு, பிரச்சாரத்தின் போது பெரும்பாலும் தலைவர்கள் வாகனம் வரும் சாலைகளில் தான் பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. சாலையோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்படுவர் என்பது அவர்களது வாதமாக உள்ளது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications