கேரள சம்பவம் எதிரொலி... தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க தடை வருமா?
சென்னை: கேரளாவில் கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து தீவிபத்து ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணிகள் உறுதியாகிவிட்ட நிலையில், வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக சார்பில் போட்டியிடும் 227 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 9ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதேபோன்று மற்ற கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

கேரள கோவில் தீ விபத்து...
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூர் புட்டிங்கல் கோயிலில் வாணவேடிக்கை திருவிழாவின் போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தடை கோரிக்கை...
பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வரவேற்பு...
தேர்தல் பிரச்சாரங்களின் போது, தலைவர்களையும், வேட்பாளர்களையும் வரவேற்க, கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடிப்பது வழக்கம். ஆனால், கேரள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் பாதுகாப்பு...
எனவே, மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்...
அதோடு, பிரச்சாரத்தின் போது பெரும்பாலும் தலைவர்கள் வாகனம் வரும் சாலைகளில் தான் பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. சாலையோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகளும் பாதிக்கப்படுவர் என்பது அவர்களது வாதமாக உள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications