கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் "கணக்கு" சரியா வரலையே.. குழப்பத்தில் பாஜக, தேமுதிக!
சென்னை: தமிழகத்தில் தங்களுக்கு அதிகளவில் உறுப்பினர்கள் இருப்பதாக பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூறி வந்தன. ஆனால், சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் கிடைக்காதது இக்கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் பாமக ஓரளவிற்கு நல்ல வாக்குகள் பெற்றுத் தப்பித்துக் கொள்ள, பாஜக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி போன்றவை வாக்கு சதவீதத்தில் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தக் கட்சிகளுக்கு எதிர்பார்த்த வாக்குகள் தேர்தலில் பதிவாகவில்லை.
சுமார் 25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் தேமுதிகவிற்கு வெறும் 10 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதேபோல், 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக சொல்லி வரும் பாஜகவிற்கு 2.7 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

மாற்றம் தேடி...
இதனால் தங்களது கட்சி உறுப்பினர்களே மாற்றம் தேடி வேறு கட்சிக்கு வாக்களித்து விட்டார்களா என்ற குழப்பம் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது கட்சி மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சந்தேகம்...
இந்தக் கூட்டத்தில் நிஜமாகவே தேமுதிகவில் மொத்தம் உள்ள உறுப்பினர்கள் எத்தனைப் பேர் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார் விஜயகாந்த். அதற்கு, 25 லட்சம் பேர் என மாவட்ட செயலாளர்கள் பதிலளித்துள்ளனர்.

மீதி எங்கே..?
அப்படியானால், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவிற்குப் பதிவான 10 லட்சம் வாக்குகள் போக, மீதமுள்ள உறுப்பினர்களின் வாக்குகள் என்னவாயின. அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களித்து விட்டார்களா? என கோபமாகக் கேட்டுள்ளார் விஜயகாந்த்.

தொண்டர்கள் அதிருப்தி...
அதற்கு தேமுதிகவின் கூட்டணி முடிவால் கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக மாவட்ட செயலாளர்கள் பதிலளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து கட்சிப் பணியில் தீவிர ஆர்வம் காட்ட அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார் விஜயகாந்த்.

மிஸ்டு கால் பாஜக...
இதேபோல், பாஜகவும் தமிழகத்தில் மிஸ்டு கால் திட்டம் மூலம் 50 லட்சம் உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாக பெருமையாகக் கூறி வந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது, மிஸ்டுகாலை பாஜகவிற்கு கொடுத்துவிட்டு, ஓட்டை வேறு கட்சிக்கு பலர் போட்டு விட்டது உறுதியாகியுள்ளது.

குழு...
இந்த தோல்விக்கான காரணம் பற்றி ஆராய்வதற்காக கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் அகில இந்திய செயலாளர் சந்தோஷ் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், கேசவ வினாயகம், வானதி சீனிவாசன், சரவணபெருமாள், செல்வக்குமார் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தனித்துப் போட்டி முடிவு...
கடைசியில் எடுத்த தனித்து போட்டி முடிவை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால், இன்னும் கனிசமான ஓட்டுக்களை பெற்று இருக்க முடியும் என அப்போது அவர்கள் கட்சித் தலைமையிடம் கூறியதாகத் தெரிகிறது.
-
டெல்லிக்கு போகும் விஜயகாந்த் மச்சான்.. தேமுதிகவின் முதல் எம்.பி.. யார் இந்த எல்.கே. சுதீஷ்? -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
நிதிஷ்குமார் முதல்வர் பதவி காலி.. ஆரம்பித்த பாஜக! அதிமுகவுக்கு அச்சம்.. எடப்பாடிக்கும் இதே கதி தானா! -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு












Click it and Unblock the Notifications