கூட்டிக் கழிச்சுப் பார்த்தாலும் "கணக்கு" சரியா வரலையே.. குழப்பத்தில் பாஜக, தேமுதிக!
சென்னை: தமிழகத்தில் தங்களுக்கு அதிகளவில் உறுப்பினர்கள் இருப்பதாக பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூறி வந்தன. ஆனால், சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் கிடைக்காதது இக்கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் பாமக ஓரளவிற்கு நல்ல வாக்குகள் பெற்றுத் தப்பித்துக் கொள்ள, பாஜக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி போன்றவை வாக்கு சதவீதத்தில் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இந்தக் கட்சிகளுக்கு எதிர்பார்த்த வாக்குகள் தேர்தலில் பதிவாகவில்லை.
சுமார் 25 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாகச் சொல்லிக் கொள்ளும் தேமுதிகவிற்கு வெறும் 10 லட்சம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதேபோல், 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக சொல்லி வரும் பாஜகவிற்கு 2.7 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

மாற்றம் தேடி...
இதனால் தங்களது கட்சி உறுப்பினர்களே மாற்றம் தேடி வேறு கட்சிக்கு வாக்களித்து விட்டார்களா என்ற குழப்பம் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது கட்சி மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சந்தேகம்...
இந்தக் கூட்டத்தில் நிஜமாகவே தேமுதிகவில் மொத்தம் உள்ள உறுப்பினர்கள் எத்தனைப் பேர் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார் விஜயகாந்த். அதற்கு, 25 லட்சம் பேர் என மாவட்ட செயலாளர்கள் பதிலளித்துள்ளனர்.

மீதி எங்கே..?
அப்படியானால், சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவிற்குப் பதிவான 10 லட்சம் வாக்குகள் போக, மீதமுள்ள உறுப்பினர்களின் வாக்குகள் என்னவாயின. அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களித்து விட்டார்களா? என கோபமாகக் கேட்டுள்ளார் விஜயகாந்த்.

தொண்டர்கள் அதிருப்தி...
அதற்கு தேமுதிகவின் கூட்டணி முடிவால் கட்சித் தொண்டர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக மாவட்ட செயலாளர்கள் பதிலளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து கட்சிப் பணியில் தீவிர ஆர்வம் காட்ட அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார் விஜயகாந்த்.

மிஸ்டு கால் பாஜக...
இதேபோல், பாஜகவும் தமிழகத்தில் மிஸ்டு கால் திட்டம் மூலம் 50 லட்சம் உறுப்பினர்களாக சேர்த்துள்ளதாக பெருமையாகக் கூறி வந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது, மிஸ்டுகாலை பாஜகவிற்கு கொடுத்துவிட்டு, ஓட்டை வேறு கட்சிக்கு பலர் போட்டு விட்டது உறுதியாகியுள்ளது.

குழு...
இந்த தோல்விக்கான காரணம் பற்றி ஆராய்வதற்காக கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் அகில இந்திய செயலாளர் சந்தோஷ் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், கேசவ வினாயகம், வானதி சீனிவாசன், சரவணபெருமாள், செல்வக்குமார் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தனித்துப் போட்டி முடிவு...
கடைசியில் எடுத்த தனித்து போட்டி முடிவை ஆரம்பத்திலேயே எடுத்திருந்தால், இன்னும் கனிசமான ஓட்டுக்களை பெற்று இருக்க முடியும் என அப்போது அவர்கள் கட்சித் தலைமையிடம் கூறியதாகத் தெரிகிறது.
-
எல்லாம் ஓவர்.. நெருங்கும் கிளைமேக்ஸ்.. பாஜக தலைமை மேஜர் முடிவு.. இன்று வெளியாகும் வேட்பாளர் பட்டியல் -
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications