இந்தி பேசாதவர்களை மத்திய அரசு 2ம் தர குடிமக்களாக பாவிக்கிறது... காங். கண்டனம்
புதுவை: தமிழர்கள் மற்றும் இந்தி பேசாத மக்களை மத்திய அரசு 2ம் தர குடிமக்களாகவே பாவிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற நாள் முதற்கொண்டு அனைத்து துறைகளிலும் இந்திக்கு முதலிடம் கொடுக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுக் கூறப்படுகிறது. அதனை மெய்ப்பிப்பது போலவே முக்கிய அரசு சுற்றறிக்கைகளும் இந்தியிலேயே அனுப்பப் படுகிறது.
இந்நிலையில், முக்கிய சிவில் சர்வீஸ் முதுநிலைத் தேர்வுகளில் ஆங்கிலக் கேள்விகளுக்கு பதில் அளித்தால் கிடைக்கக் கூடிய 22 மதிப்பெண்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை உண்டாகியுள்ளது.
எனவே, இந்தி தெரியாத மக்களை மத்திய அரசு இரண்டாம் தர குடிமக்களாக பாவிப்பதாக காங்கிரஸ் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
2ம் தர குடிமக்கள்....
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு தமிழக மக்களையும் மற்றும் இந்தி பேசாத மாநிலங்களில் வாழும் மக்களையும் 2-ம்தர குடிமக்களாகவே நினைக்கிறது.
முன்னுரிமை...
எனவேதான் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் திரேந்திர சிங் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற முக்கிய சிவில் சர்வீஸ் முதுநிலை தேர்வுகளில் ஆங்கில கேள்விகளுக்கு பதில் அளித்தால் கிடைக்கக்கூடிய 22மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றும், மேலும் ஆங்கில அறிவை சோதிக்கும் கேள்விகளுக்கு நன்றாக பதில் அளித்தாலும் முன்னுரிமை கொடுக்கப்படாது என்றும் அறிவித்துள்ளார்.
தேர்வாணைய சட்டம்...
திறனறிவு தேர்வில் 2-ம் தாளில் 8கேள்விகளுக்கு ஆங்கில புலமையை சோதிக்க 22மதிப்பெண்கள் 2011-ம் ஆண்டு கொண்டுவந்த மேற்கண்ட தேர்வாணைய சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
திருத்தம் தேவை...
இந்த 22மதிப்பெண்களை இந்தி அல்லாத மற்ற மொழிகளில் தேர்வு எழுதுபவருக்கு கிடைக்கக்கூடிய வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும்' என இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications