எலெக்ஷன் ஆபீசர் சார்.. ஆச்சு ஒரு வருஷம்... சிறுதாவூர் பங்களா பணம் பற்றிய அறிக்கை வரலையே?
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில்தான் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெய்னர் லாரிகளில் இருந்து இறக்கப்படுகிறது என கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது வைகோ புகார் கூறியதுக்கு, விரைவில் மாவட்ட கலெக்டர் அறிக்கை
சென்னை: சிறுதாவூர் பங்களாவில் இருந்து கட்டுக்கடாகப் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்கிற வைகோவின் புகாருக்கு, விரைவில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை கொடுப்பார் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் கூறினார். அவர் பதில் கூறி ஒரு வருடம் ஆகும் நிலையில், இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது தங்கி ஓய்வெடுக்கும் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த சிறுதாவூர் பங்களாவில், பல கண்டெய்னர்களில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் இறக்கப்பட்டது என தொடர்ந்து புகார் கூறி வந்தார்.

அவருடைய புகாருக்கு அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், 'பணம் இறக்கப்படுவதாகக் கூறும் வைகோ, அதிலிருந்து ஒரு கட்டுப் பணத்தை எடுத்து எங்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாமே' என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார்.
'சிறுதாவூர் பங்களாவில் இருந்து பணம் கண்டெய்னர் மூலம் வெளியே கொண்டு செல்லப்படுகிறதா?' என அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் 'மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் இதுகுறித்து அறிக்கை அனுப்பச் சொல்லியிருக்கிறேன்' என கூறினார்.
அவர் சொல்லி, ஒரு வருடம் நெருங்கும் வேளையில் இதுகுறித்து ஒரு அறிக்கையும் கொடுக்கப்படவில்லை. அந்த கண்டெய்னர் விஷயத்தை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில்தான் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications