எலெக்ஷன் ஆபீசர் சார்.. ஆச்சு ஒரு வருஷம்... சிறுதாவூர் பங்களா பணம் பற்றிய அறிக்கை வரலையே?
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில்தான் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெய்னர் லாரிகளில் இருந்து இறக்கப்படுகிறது என கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது வைகோ புகார் கூறியதுக்கு, விரைவில் மாவட்ட கலெக்டர் அறிக்கை
சென்னை: சிறுதாவூர் பங்களாவில் இருந்து கட்டுக்கடாகப் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்கிற வைகோவின் புகாருக்கு, விரைவில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை கொடுப்பார் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் கூறினார். அவர் பதில் கூறி ஒரு வருடம் ஆகும் நிலையில், இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது தங்கி ஓய்வெடுக்கும் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த சிறுதாவூர் பங்களாவில், பல கண்டெய்னர்களில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் இறக்கப்பட்டது என தொடர்ந்து புகார் கூறி வந்தார்.

அவருடைய புகாருக்கு அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், 'பணம் இறக்கப்படுவதாகக் கூறும் வைகோ, அதிலிருந்து ஒரு கட்டுப் பணத்தை எடுத்து எங்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாமே' என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார்.
'சிறுதாவூர் பங்களாவில் இருந்து பணம் கண்டெய்னர் மூலம் வெளியே கொண்டு செல்லப்படுகிறதா?' என அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் 'மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் இதுகுறித்து அறிக்கை அனுப்பச் சொல்லியிருக்கிறேன்' என கூறினார்.
அவர் சொல்லி, ஒரு வருடம் நெருங்கும் வேளையில் இதுகுறித்து ஒரு அறிக்கையும் கொடுக்கப்படவில்லை. அந்த கண்டெய்னர் விஷயத்தை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில்தான் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications