மாணவர்களின் மூளை திறனை அதிகரிக்கும் யோகா - பள்ளி மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு
காய்கறிகளை சாப்பிட்டால் படிக்கும் திறன் அதிகரிக்கும், மூளையின் திறன் அதிகரிக்கும் என பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், இன்று காஸ்மாஸ் அரிமா சங்கம் சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
காஸ்மாஸ் அரிமா சங்கத்தலைவர் திரு. சார்லஸ் அவர்கள் தலைமையேற்றார்.வட்டாரத் தலைவர் திரு.ஆறுமுகம் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் திரு.ஆ. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
காரைக்குடி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர். அறிவழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

டாக்டர் பேச்சு
புற்றுநோய் கட்டி உருவாகும் விதம் பற்றியும், புற்றுநோய் கட்டியை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்ளும் முறை பற்றியும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் டாக்டர். அறிவழகன் விரிவாகக் கூறினார்.
அரிமா சங்க குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்க மாவட்டத் தலைவர் இஞ்சினியர். திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசுகையில், புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்களைப்பற்றி விளக்கினர்.

படிக்கும் திறன் அதிகரிப்பு
மேலும் உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் நாம் நோயிலிருந்து 80% விடுபடலாம் என்றும், காய்கறிகளை சாப்பிட்டால் படிக்கும் திறன் அதிகரிக்கும், மூளையின் திறன் அதிகரிக்கும் எனவும் வாழும்போது ஆரோக்கியமாக வாழ யோகா, உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றும் பேசினார்.

புற்றுநோய் விழிப்புணர்வு
நிகழ்ச்சியில் காஸ்மாஸ் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

உணவு, யோகா
பள்ளிகளில் பாடங்களுடன் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, யோகா, உடற்பயிற்சி, சத்தான காய்கறிகள் பற்றியும் விளக்கம் அளித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டதற்கு பெற்றோர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications