சென்னை- வங்கதேசம் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடக்கம்!
சென்னை - வங்கதேசம் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை துறைமுகத்திலிருந்து வங்கதேசத்திற்கு சரக்கு கப்பல் சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
சென்னை - வங்கதேசம் இடையே இன்று முதல் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணெலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.

சென்னை துறைமுகத்திலிருந்து லாரிகள் மூலமே சரக்குகள் வங்கதேசத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சென்னை துறைமுகத்திலிருந்து சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, சென்னை துறைமுகத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள மோங்ளா துறைமுகத்துக்கு அசோக் லைலேன்ட் நிறுவனம் 185 லாரிகளை 'ரோரோ' கடலோர கப்பல்கள் மூலம் இன்று முதல் முறையாக அனுப்ப உள்ளது.
அசோக் லேலன்ட் நிறுவனம் இதுவரை லாரிகளை வங்காளதேசத்துக்கு சாலை வழியாக அனுப்பி வந்தது. இதனை கடல் வழியாக அனுப்புவதால் பயண நேரம் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சாலை போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற அண்டைநாடுகளுக்கும் சரக்கு கப்பல் போக்குவரத்தை அதிகரிக்க தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
கல்யாண வீடு வரைக்கும் வந்த பிரச்சனை.. எரிபொருள் தட்டுப்பாட்டால் கெடுபிடி காட்டும் வங்கதேச அரசு! போச்சு -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம்












Click it and Unblock the Notifications