வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது?... விஷத்தை விதைக்கும் சிபிஎஸ்இ கேள்வியால் சர்ச்சை!
மத்திய அரசு கல்வி வாரியமான சிபிஎஸ்இயில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை : மத்திய அரசு கல்வி வாரியமான சிபிஎஸ்இயில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய சிந்தனைகளை வளர்க்கும் வகையில் விஷத்தை விதைக்கும் விதமாக கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
சிபிஎஸ்இ 6ம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளில் இந்துமத வர்ணாசிரமத்தின் படி மிகத்தாழ்ந்த சாதி எது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக்கேள்விக்கான விடைகளாக பிராமணர்கள், சூத்திரர்கள், ஷத்ரியர்கள், வானப்ரஸ்தா என்று கொடுக்கப்பட்டுள்ளன.

சமூகவலைதளங்களில் வைரல்
மாணவர்கள் மத்தியில் விஷத்தை விதைக்கும் வகையில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்தக் கேள்வித் தாள் வேகமாக பரவி வருகிறது.

வழக்கறிஞர் அருள்மொழி பதிவு
மாணவர்கள் மத்தியில் விஷத்தை விதைக்கும் வகையில் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. சமூக வலைதளங்களிலும் இந்தக் கேள்வித் தாள் வேகமாக பரவி வருகிறது. ஆர்எஸ்எஸ்இன் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட பாட்டத்திட்டம் இது. நாளை இதுதான் அவர்கள் முன்வைக்கப் போகும் அரசியல் சட்டம் என்று வழக்கறிஞர் அருள்மொழி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கல்வியாளர்கள் எழுப்பும் கேள்வி
6ம் வகுப்பினருக்கு அந்தந்த சிபிஎஸ்இ பள்ளிகளே கேள்வித் தாள்களை வடிவமைத்துக் கொள்கின்றன. எனினும் என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளியிட்டுள்ள பாடநூலின் அடிப்படையிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சாதி வேறுபாடு எனும் விஷம்
இது போன்ற கேள்வி வடிவமைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நீதி ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிஞ்சு வயதிலேயே மாணவர்கள் மனதில் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற விஷத்தை விதைக்கும் சிபிஎஸ்இயின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications