ஸ்கூலுக்கு போகாமல் குழந்தைகள் இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!
தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லாத குழந்தை என 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் இயக்கத்தின் சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும் என்றும், அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை சிறப்பாக செய்யவும், மேலும் கல்வி பெற முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவவும் கணக்கெடுக்கும் பணி ஒன்றை நடத்த அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், அதையும் மீறி சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள், குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பற்றிய விபரங்களை கணக்கெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தினரும், ஆசிரியர்களும் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாவட்டமாக கருதப்படும் நாமக்கல்லில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் குறித்த இந்த கணக்கெடுப்பு இரண்டு நாட்களுக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் இப்பணி தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications