ஸ்கூலுக்கு போகாமல் குழந்தைகள் இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!
தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் உள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள், பள்ளிக்கு செல்லாத குழந்தை என 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி என்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் இயக்கத்தின் சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும் என்றும், அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தை சிறப்பாக செய்யவும், மேலும் கல்வி பெற முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவவும் கணக்கெடுக்கும் பணி ஒன்றை நடத்த அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், அதையும் மீறி சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள், குழந்தை தொழிலாளர்கள் உள்ளிட்டோரை பற்றிய விபரங்களை கணக்கெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தினரும், ஆசிரியர்களும் இந்த கணக்கெடுப்பில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாவட்டமாக கருதப்படும் நாமக்கல்லில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் குறித்த இந்த கணக்கெடுப்பு இரண்டு நாட்களுக்கு தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் இப்பணி தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications