முடிவுக்கு வந்தது இழுபறி.. மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை.. தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
Recommended Video

மதுரை: எங்கே அமையும் என்பதில் பெரும் இழுபறி நீடித்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சகல மருத்துவ வசதிகளும் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையை எங்கே அமைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்திருந்தனர். ஆனால், உறுதியான அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை.

அமைச்சர் உறுதி
இந்த நிலையில், மதுரை,தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

தோப்பூரில் மருத்துவமனை
தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒருசில தினங்களில் மத்திய அரசிடமிருந்து முறைப்படியாக இதுபற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாக தெரிகிறது. தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இதன் மூலம் நிறைவேறப்போகிறது.

பொதுநல வழக்கு
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்ததால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

உயர்மட்ட கூட்டம்
இந்த நிலையில் 'எய்ம்ஸ்' தேர்வுக்குழு உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மருத்துவமனை அமைய ஏற்ற இடம் மதுரைதான் என முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதை நீதிமன்றத்திலும் மத்திய அரசு தெரிவிக்கும் என தெரிகிறது. இந்த தகவல்தான் தமிழக அரசுக்கும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications