குழந்தை கடத்தல் வதந்தி.. மனநோயாளியைக் கொன்று கண் பறிப்பு.. சென்னையில் 10 பேர் கைது
Recommended Video

சென்னை: சென்னை அருகே குழந்தை கடத்த வந்ததாகக் கூறி மனநோயாளி கொல்லப்பட்ட சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, பழவேற்காடு பகுதியில் குழந்தைகளைக் கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபரை அப்பகுதியினர் பிடித்து அடித்து கொலை செய்ததோடு, உப்புநீர் ஏரியின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலத்தின் மேல் கயிற்றால், சடலத்தைக் கட்டி கொடூரமாகத் தொங்கவிட்டனர்.

திருப்பாளைவனம் காவல்துறையினர், மனநோயாளியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் மனநோயாளி எனவும் அதே பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுற்றித்திரிந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததை வைத்து போலீசார் அவர் மனநோயாளி என முடிவுக்கு வந்தனர்.
கொலை செய்தவர்கள், மனநோயாளியின் கண்ணை தோண்டியும், மூக்கை உடைத்தும் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது உடல்கூறு ஆய்வில் தெரியவந்தது.
திருவண்ணாமலை அருகே குழந்தை கடத்த வந்ததாக அப்பாவி மூதாட்டி ருக்மணி கிராம மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல சென்னையிலும் தவறுதலாக ஒருவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை கடத்தல் தமிழகத்தில் நடப்பதாக வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளை நம்பி மக்கள் இவ்வாறு செயல்படுகிறார்கள். எனவே, குழந்தை கடத்தல் பற்றி தகவல் கிடைத்தால் அதை போலீசாருக்குதான் தெரிவிக்க வேண்டுமே தவிர சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, மனநோயாளி கொலை வழக்கில் சென்னை லைட்அவுஸ், செம்பாசிபள்ளி குப்பம், அரங்கம் குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 10 மீனவர்களை காவல்துறை கைது செய்துள்ளனர். இவர்கள்தான், மனநோயாளியை மூர்க்கத்தனமாகத் தாக்கி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications