அம்மா நான் பத்திரமா இருக்கேன்…. குண்டு வெடிப்புக்குப் பின் வீட்டிற்கு போன் செய்த மாணவர்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி ரயிலில் பயணம் செய்த பயணிகளும், அவர்களின் உறவினர்களும் குண்டு வெடிப்பு குறித்து தங்களின் அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.
கிறைஸ்ட் பல்கலைக்கழக மாணவர் அர்காதீப் பானர்ஜி குண்டு வெடிப்புக்குள்ளான கவுகாத்தி ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் குண்டு வெடித்த போது ஏற்பட்ட சம்பவங்களை விவரித்துள்ளார்.

எஸ்-5 பெட்டியில் பயணம்
நான் எஸ்-5 ரயில் பெட்டியில் இருந்தேன். அப்போது திடீரென பலத்த சத்தம் கேட்டது.

பயணிகள் ஓட்டம்
திடீரென வெடிச்சத்தம் கேட்டது. மக்கள் பதற்றத்துடன் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். குண்டு வெடிப்பு நடந்துள்ளது என புரிந்து கொண்டேன்.

போலீசார் உதவவில்லை
உடனடியாக எஸ்-5 ரயில் பெட்டியில் இருந்து வெளியேறினேன். மக்கள் குழப்பத்துடன் ஓடிக்கொண்டிருக்க அங்கே இருந்த போலீசார் யாரும் எங்களுக்கு உதவ முன் வரவில்லை.

அம்மாவுக்கு போன்
பின்னர் நான் என் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்தேன்" என்றார்.

கேஸ் சிலிண்டர் வெடிச்சத்தம்
சிலிண்டர் வெடிப்பது போல கேட்டதாக எஸ் 3 பெட்டியில் பயணம் செய்த மற்றொரு பயணி கூறியுள்ளார்.

காயத்தோடு பயணிகள்
சென்னை வந்த உடன் படுக்கையில் இருந்து நான் எழுந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் காலை 7.15 மணியானது... திடீரென்று அருகில் இருந்த பெட்டியில் இருந்து டமால் என்ற சத்தம் கேட்டது.

ஒரே குழப்பம்
மக்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள். பிறகுதான் எஸ் 4, எஸ் 5 பெட்டியில் நான் குண்டு வெடித்ததை உணர்ந்தேன். உடனே நான் பெட்டியை விட்டு அவரசமாக வெளியேறினேன்.

காயத்தோடு பயணிகள்
குண்டு வெடித்த பெட்டியில் சிலர் காயத்தோடு விழுந்து கிடந்ததை கண்டேன். காயத்தின் வலியில் அவர்கள் அலறிக்கொண்டிருந்தனர் என்று கூறியுள்ளார் அந்த பயணி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications