ஜெயலலிதா மரணம்.. விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜராக வேண்டும்.. சசிகலா தரப்பு வலியுறுத்தல்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆஜராக வலியுறுத்துவோம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆஜராக வலியுறுத்துவோம் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் ஆஜராகி வருகின்றனர்.
இதேபோல் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களும் விசாரணை கமிஷனில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறது. விசாரணை கமிஷனில் அஜராகுபவர்களை சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்து வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை
இந்நிலையில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களை ஆஜர் படுத்த சசிகலா தரப்பு கோரிக்கை வைத்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்களிடம் வியாழக்கிழமை விசாரணையும், வெள்ளிக்கிழமை சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணையும் நடைபெறவுள்ளது.

பல முக்கிய தகவல்கள்
இதுதொடர்பாக பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் எய்ம்ஸ் மருத்துவர்களை விசாரணை செய்வதன் மூலம் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரிய வரும் என்றார்.

ஓபிஎஸ் ஆஜராக வலியுறுத்தல்
மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார். விசாரணையிலிருந்து விலக்கு கோரிய ஆடிட்டர் குருமூர்த்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குருமூர்த்திக்கு விலக்கு?
விசாரணைக்கு ஆஜராக குருமூர்த்திக்கு விலக்கு அளிக்கப்பட்டால் ஆஜராக உத்தரவிடப்படும் அனைவரும் அந்த நிலையை எடுக்கும் சூழல் ஏற்படும் என ஆணையம் தெரிவித்துள்ளதாகவும் ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications