திண்டுக்கல் ரீட்டாக்கள் ரெடியா.. கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த ஹைகோர்ட் அனுமதி
சென்னை: கோயில் திருவிழாவில் ஆடல்-பாடல்கள் நடத்த தடை உள்ள நிலையில், மேடை கச்சேரிகளில், ஆடலை தவிர்த்து வெறும் பாடலோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில், திருச்சங்கோடு தாலுகா, தொண்டிகரடு கிராமத்தை சேர்ந்த டி.தாமோதரன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எங்கள் ஊரிலுள்ள, ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 31ம் தேதி கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கேட்டு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் மனு கொடுத்தேன்.

ஆனால், என் மனுவை போலீசார் பரிசீலிக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து கலாச்சார நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நடைபெற்றது. அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் எஸ்.திவாகர் ஆஜரானார். கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்த அனுமதித்தால் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என போலீசார் கூறியதாக, அரசு தரப்பு தெரிவித்தது.
நீதிபதி சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று போலீசாரிடம் உள்ள வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்படும் பயத்தின் காரணமாக, கலாச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூற முடியாது என்று கூறிய நீதிபதி, வரும் 31ம் தேதி கோவிலில் கலாச்சார நிகழ்ச்சி நடத்திக் கொள்ள மனுதாரருக்கு அனுமதி வழங்கினார்.
அதேநேரம், நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள், ஆபாச வசனங்கள் இடம்பெறக்கூடாது. மாணவர்கள், இளைஞர்களின் மனதை களங்கப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெறக்கூடாது. அரசியல் கட்சிகள், மதம், சாதி தொடர்பான எந்த ஒரு பாடல்களும், நடனமும் இடம் பெறக்கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications