வெள்ளத்தில் மூழ்கிய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வசிக்கும் ரிவர் வியூ காலனி - 500 பேர் மீட்பு
சென்னை: சென்னை அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மணப்பாக்கத்தில் 40 ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் வசிக்கும் ரிவர் வியூ காலனி நீரில் மூழ்கியது. அங்கிருந்து 500 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகுகள் மூலம் மீட்டனர்.
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஆலந்தூர் மாநகராட்சி மண்டலம் 157 ஆவது வார்டு மணப்பாக்கம் அடையாறு ஆற்றை ஒட்டி ரிவர் வியூ காலனி உள்ளது. அங்கு 40 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பங்களாக்கள் உள்ளிட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.

தண்ணீரில் மூழ்கிய ரிவர் வியூ காலனி:
இங்கு 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று முன்தினம் மாலை அடையாறு நிரம்பி ரிவர் வியூ காலனிக்குள் தண்ணீர் புகுந்தது. இரவு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக நீர் வரத்து அதிகரித்து நேற்று அதிகாலை ஆறு அடி உயர வெள்ளநீரில் பங்களாக்கள் மற்றும் குடியிருப்புகள் முழ்கின.

500 பேர் மீட்பு:
அரக்கோணம் பாட்டாலியன் 4ஐ சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 வீரர்கள் குழு கமாண்டர் பிஸ்வால் தலைமையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணியில் இருந்து மாலை வரை 500 பேர் பேரிடர் மீட்புப் படகு மற்றும் மீனவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

மூழ்கிய இருசக்கர வாகனங்கள்:
இந்த வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் மூழ்கின. மீட்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினர் உறவினர் வீடுகள் மற்றும் லாட்ஜ்களில் தஞ்சமடைந்தனர்.

10 ஆண்டுகளுக்குப் பிறகும்:
2005 இல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது இதே போல் இந்த குடியிருப்புகள் மூழ்கின. 10 ஆண்டுகளில் வெள்ளத் தடுப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications