சாத் பூஜை: மெரீனாவில் குவிந்த பீகாரிகள், வட இந்தியர்கள்!
சென்னை: வருடாந்திர சாத் பூஜையை முன்னிட்டு சென்னையில் வசித்து வரும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள், வட இந்தியப் பெண்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவி்ந்து சூரிய பகவானை வழிபட்டு வேண்டிக் கொண்டனர்.
சென்னையில் வசித்து வரும் பீகாரிகள், ஜார்க்கண்ட், உ.பி. உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்ததால் மெரீனா ஒரு குட்டி வட இந்தியாவாக காட்சி தந்தது.
முன்பெல்லாம் சாத் பூஜா சென்னையில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் தற்போது அதிக அளவில் பீகார், உ.பி,. ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையில் குடியேறி வருவதால் இந்த ஆண்டு சாத் பூஜையின்போது பெருமளவில் கூட்டம் கூடியிருந்தது.

சூரிய வணக்கம்
சாத் பூஜை என்பது பீகார், உ.பி, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லநடத்தப்படும் இந்து மத விழா இது.

நான்கு நாள் விழா
நான்கு நாட்களுக்கு இது நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர்.

சென்னையிலும் பிரபலமாகிறது
வட இந்திய பண்டிகையான இது தற்போது சென்னையிலும் பிரபலமாகி வருகிறது. காரணம், இங்கு அதிக அளவில் பெருகி வரும் பீகாரிகள், உ.பி காரர்கள் எண்ணிக்கைதான்.

மெரீனாவில் கூட்டம்
சாத் பூஜையின் கடைசி நாளான நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் பெருமளவில் பீகாரிகள், உ.பி, ஜார்க்கண்ட் மாநிலத்தவர் திரண்டு பூஜை நடத்தினர்.

பெண்களின் பண்டிகை
இது பெண்களின் பண்டிகை ஆகும். இரண்டு இரவும், ஒரு பகலும் அவர்கள் தங்களது குடும்பத்தினரின் நலனுக்காக விரதம் இருந்து நான்காவது நாளில் குடும்பத்தினருடன் கூடி சூரிய பகவானுக்கு நன்றி கூறி வழிபாடு நடத்துவர்.

நீரில் மூழ்கி வழிபாடு
நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி பின்னர் வழிபாடு நடத்துவர் பெண்கள். மேலும், சூரிய பகவானுக்கு இளநீர், பழங்கள், இனிப்புகளை படையல் இடுவர்.

சென்னையில் பீகாரிகள்
சென்னையில் சமீப காலமாக பீகாரிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இன்ன தொழில்தான் என்றில்லாமல் பல தொழில்களிலும் அவர்கள் அதிகரித்துள்ளனர்.

கட்டுமானம் முதல் ஹோட்டல் சப்ளையர் வரை
கட்டுமானத் தொழில் முதல் ஹோட்டல் சப்ளையர் வரை பீகாரிகள் பெருக்கம் அதிகரித்துள்ளது. இங்கு நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் பல்கிப் பெருகி வருகின்றனர்.

தமிழக தொழிலாளர்கள் குறைந்ததால்
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் வந்ததால் தமிழகத்தில் கட்டுமானத் தொழிலுக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்து போய் விட்டது. இந்த இடத்தை தற்போது பீகாரிகள் தான் நிரப்பி வருகின்றனர்.

வட கிழக்கு இந்தியர்கள் பெருக்கம்
அதேபோல வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பெருகி வருகின்றனர். சமையல் வேலை, துப்புறவு வேலை உள்ளிட்டவற்றில் இவர்களது பெருக்கம் அதிகரித்துள்ளது. நன்றாக தமிழும் பேசுகின்றனர்.
இதன் காரணமாகவும் சாத் பூஜை சென்னையிலும் பிரபலமாகி வருகிறது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications