எல்நினோ தாக்கம்.. சென்னையை உருக்குலைத்த வரலாறு காணாத கனமழை...
Subscribe to Oneindia Tamil
சென்னை: 100 ஆண்டுகளில் வரலாறு காணாத பெருமழையை சென்னை எதிர்கொள்வதற்கு 'எல்நினோ' எனும் பருவ நிலை மாற்றத்தின் தாக்கமே மிக முக்கிய காரணம் என்கின்றனர் வானிலை ஆய்வு வல்லுநர்கள்...

சென்னையில் வரலாறு காணாதயின் பின்னணி....
- தமிழகத்தில் பொதுவாக வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் சராசரியாக 44 செ.மீ. மழை கிடக்கும்.
- நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை சுமார் 65 செ.மீ. மழை கிடைத்துள்ளது.
- இந்த வடகிழக்குப் பருவ மழை காலத்தில் சென்னைக்கு 79 செ.மீ மழை பெய்ய வேண்டும்.
- நடப்பாண்டில் சென்னையில் இதுவரை 158 செ.மீ. மழை கொட்டியுள்ளது.
- டிசம்பர் 1-ந்தேதி மட்டும் 49 செ.மீ. மழை பெய்தது.
- 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் 49 செ.மீ மழை சென்னையில் கொட்டியது.
- டிசம்பர் 4-ந்தேதியும் 40 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
- இத்தகைய வரலாறு காணாத கனமழைக்கு எல்நினோ எனப்படும் பருவ நிலை மாற்றமும் ஒரு காரணமாகும்.
- பசிபிக் கடல் நீர்மட்டம் பொதுவாக 60 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இது 80 டிகிரி மற்றும் அதற்கு அதிகமாக உயரும் போது வானிலையில் கடும் மாற்றங்கள் உருவாகும். இதைத்தான் எல்நினோ என குறிப்பிடுகின்றனர்.
- இந்த எல் நினோ விளைவின் காரணமாக உலகின் பல பகுதிகளிலும் கடல் நீரின் வெப்பம் அதிகரித்தது.
- தெற்கு வங்க கடல் பகுதியில் வெப்பத்தின் அளவும் மிகவும் அதிகரித்து வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் அடுத்தடுத்து உருவாயின.
- கடல் நீரும் அதிக அளவில் ஆவியாகி தீவிர மழை மேகங்களை நிலப்பகுதியை நோக்கி அடுத்தடுத்து அனுப்பியது. இதை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனும் கூட உறுதி செய்திருந்தார்.
- இதுவே சென்னையிலும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை பெய்ய காரணம்.
- எல் நினோவின் தாக்கம் நீடிக்கும்; இதனால் தொடர்ந்தும் கனமழைக்கு வாய்ப்பு உண்டு எனவும் எச்சரிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications