இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகள் முறைகேடு.. கோவை மாவட்ட கல்வி அலுவலகம் முற்றுகை
இடஒதுக்கீட்டு முறைகேடுகளை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.
Recommended Video

கோவை: கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி முறையாக மாணவர்களை தேர்வு செய்வதில்லை எனவும், பள்ளியில் சேர்த்தாலும் உடனடியாக கட்டணத்தை கட்ட பள்ளிகள் வருபுறுத்துவதாக கூறியும் கோவையில் பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழை மாணவர்களும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இந்த வருடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு, அதற்கான குலுக்கல் முறையும் கோவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இந்நிலையில் பெற்றோர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பள்ளிகளில் குலுக்கல் முறை நடைபெற்றதாக புகார் எழுந்து உள்ளது. தனியார் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளும் படிக்க மிகுந்த ஆர்வமாக இருந்து வந்த சூழலில் தற்போது முற்றிலும், ஏமாற்றும் வேலையாக பள்ளிகள் நடந்து கொள்வதாகவும் , சில பள்ளிகளே மாணவர்களை தேர்வு செய்து சேர்க்கை நடத்தப்படுவதாகவும் பெற்றோர்களுக்கு எந்தவித அறிவிப்பும் தெரிவிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழ தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு முதல் பள்ளியின் அருகே உள்ள ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே உள்ள மாணவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அறிவிப்பால் பெரும்பாலான மாணவர்கள் சேர முடியாத நிலையில் இருப்பதால், அந்த இட ஒதுக்கீடு முற்றிலும் காலியாகவே உள்ளதாக கூறுகின்றனர்.
தங்களுக்கு இடம் வழங்க வேண்டி பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி அரசே அவர்களுக்கான கட்டணத்தை கட்டும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த இட ஒதுக்கீட்டில் மாணவர்களை பள்ளிகள் சேர்த்தாலும், உடனடியாக பல்வேறு கட்டணங்களை கட்ட வற்புறுத்துவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications