'மேட்' பேரவை விண்ணப்பம் விற்று மோசடி... தீபா மீது போலீசில் புகார்
தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது
சென்னை: தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் விற்றதில் மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கம் ஜானகிராம் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலிப்பதாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய பேரவையை தொடங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை என்று பெயர் வைத்து கொடியை அறிமுகம் செய்தார்.

விண்ணப்பம் விற்று வசூல்
தீபாவின் டிரைவர் ராஜாவின் ஆலோசனைப்படிதான் ‘எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை' ஆரம்பிக்கப்பட்டது. 3 லட்சம் அப்ளிகேஷன் ஃபார்முக்கு தலா 10 ரூபாய், ஒரு விண்ணப்பத்திற்கு 25 உறுப்பினர்கள் வீதம் 250 ரூபாய்னு கிட்டத்தட்ட 7 கோடிக்கும் மேல வசூலானதாக தெரிகிறது.

கோடி கோடியாய் பணம்
ஒன்றிய செயலாளர் பதவிக்கு 5 லட்சம் , மாவட்ட செயலாளர் பதவிக்கு 10 லட்சம் என்று வசூலித்தனர். இது தவிர பல வழிகளிலும் கோடிக்கணக்கில் பணம் வசூலானதாம். கோடி கோடியாக பணம் கொட்டவே தீபா, கணவன் மாதவன், தீபாவின் டிரைவர் ராஜா இடையே சிக்கல் உருவானது. இதில் ஒரு பெட்டியில் பணத்தை எடுத்துக்கொண்டு மாதவன் வெளியேறியதாக புகார் எழுந்தது.

மாதவன் அக்கப்போர்
இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையில் இருந்து வெளியேறுவதாக கூறி தனிக்கட்சி தொடங்குவதாக கூறினார் மாதவன். எம்ஜிஆர். அம்மா தீபா பேரவையின் அங்கீகாரமே ரத்தாகிவிட்டது. இதைப்பற்றி யாருக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் நிர்வாகிகள் தினசரியும் சென்னை வந்து தீபா வீட்டு வாசலில் மாதவன் ஆதரவாளர்களுடன் சண்டை போட்டுக்கொள்கின்றனர்.

தீபா மீது புகார்
இந்த சூழ்நிலையில்தான் தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பலகோடி ரூபாய் மோசடி என புகார் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் விற்றதில் மோசடி செய்துள்ளதாக நெசப்பாக்கம் ஜானகிராம் குற்றம் சாட்டியுள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து பணம் வசூலிப்பதாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தீபாவை நம்பி கோடி கோடியாய் பணத்தைக் கொண்டியவர்கள் இப்போது முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications