அனைத்துச் சாலைகளிலும் வரலாறு காணாத ட்ராஃபிக்... திக்கித் திணறும் சென்னை!
சென்னை: சென்னை மாநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று காலையிலிருந்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நகரின் அனைத்து பிரதான சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளதாக வாகன ஓட்டிகள், பயணிகள் தெரிவித்துள்ளனர்.

வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று அதிகாலையிலிருந்தே சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை நகரம், புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை.
இதனால் எல்லா பகுதிகளிலும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல, போக்குவரத்து ஸ்தம்பித்தது. அண்ணா சாலை, ஆற்காடு சாலை, மவுன்ட் பூந்தமல்லி சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, தி நகருக்குச் செல்லும் பிரதான சாலைகள், அமைந்தகரை சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை என பெரும்பாலான சாலைகளில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல்.
அடையாறிலிருந்து வடபழனி வர 2.30 மணி நேரம் பிடித்ததாக வாகன ஓட்டி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
இன்றைய போக்குவரத்து நெரிசலுக்கு மழை மட்டும் காரணமல்ல... தேவர் ஜெயந்தி என்பதால் அனைத்துக் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் அவருக்கு அஞ்சலி செலுத்த தங்கள் ஆதரவாளர்களுடன் குவிந்துள்ளதும் ஒரு காரணம். இந்த கன மழையிலும், தங்கள் அஞ்சலியைச் செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.
இன்றைய தினம் சென்னை நகருக்குள் செல்பவர்கள் திரும்பி வருவதற்குள் ஒரு நரகத்தைச் சந்திக்க வேண்டும் என்கிறார்கள் அவதிக்குள்ளான அனுபவஸ்தர்கள்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications