ஆடலும் பாடலும் என்று ஆபாச நடனம் நடத்துவதா? : ஹைகோர்ட் குட்டு
கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதாகக் கூறி பொது இடத்தில் ஆபாச நடனம் நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
சென்னை: கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்துவதாக அனுமதி பெற்று, ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சில கோவில்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மனு அளித்ததாகவும், அவற்றை பரிசீலித்து, நிகழ்ச்சிக்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், நாமக்கல் மாவட்டத்தில் அடிக்கடி கோவில் திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி வழக்குகள் தொடரப்படுவதை கவனித்து, மாவட்ட எஸ்பி, ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட டிஎஸ்பி, திருவிழாக்கள் குறித்த அறிக்கையும், அதற்கான வீடியோ பதிவையும் கோர்டில் தாக்கல் செய்தார். அந்த வீடியோவில், ஆடல் பாடல் என்ற பெயரில் பெண்கள் ஆபாச நடனம் ஆடுவதும், இளைஞர்கள் குடிபோதையில் கும்மாளம் போடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்துவதாக அனுமதி பெற்று, ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கும்படி உத்தரவு பிறப்பித்ததற்காக நீதிபதி பி.என்.பிரகாஷ் தன் உத்தரவில் வேதனையும், வருத்தமும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழங்கு பிரச்சனை தொடர்பாக முடிவெடுக்கும் காவல் துறையினரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இதுபற்றி அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கோவில் விழாக்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதாகக் கூறி பொது இடத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனக் கூறி 6 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்ற உத்தரவினால் கலைநிகழ்ச்சி நடத்தும் திண்டுக்கல் ரீட்டாக்கள் கவலையடைந்துள்ளனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications