தமிழக மீனவர்களைச் சித்ரவதை செய்வதே ராஜபக்சே அரசின் அன்றாட நடவடிக்கை- தா.பாண்டியன்
சென்னை: தமிழக மீனவர்களை சித்ரவதை செய்வதே ராஜபக்சே அரசின் அன்றாட நடவடிக்கையாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கையில், ''இராமநாதபுரம் தங்கச்சி மடம் கிராமத்தை சார்ந்த மீனவர்கள் லாங்லெட்,பிரசாத்,அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய ஐந்து மீனவர்களுக்கும் இலங்கை உயர்நீதிமன்றம் மரணதண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
2011 ஆம் ஆண்டு போதைப் பொருள்கள் கடத்தியதாக இலங்கை கப்பற்படையால் கைது செய்யப்பட்டு இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி:
ஐந்து மீனவர்களுக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனை தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.

ராஜபக்சே அரசின் அன்றாட நடவடிக்கை:
தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்தும், சித்ரவதை செய்வதும், ராஜபக்சே அரசின் அன்றாட நடவடிக்கையாக நிகழ்ந்து வருகிறது.

அப்பாவிகளான மீனவர்கள்:
இந்த நிலையில் இந்த தூக்குத் தண்டனை வழங்கும் மற்றொரு நடவடிக்கையும் எடுக்கப் பட்டுள்ளது. மீனவர்கள் அப்பாவிகள் என்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலை செய்ய நடவடிக்கை:
இந்திய அரசு, தலையிட்டு இந்த அப்பாவி மீனவர்களை உடன் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications