கரும்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்
சென்னை: தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலைகளுக்கு எதிராக கரும்பு விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டமானது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கரும்பு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானத்தில், தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட வேண்டிய 1000 கோடி ரூபாய்க்கும் மேலான நிலுவைத் தொகையானது அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மாநில அரசால் அறிவிக்கப்பட்ட கூடுதல் விலையை வழங்கக் கோரியும் கடந்த 2 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசானது இவ்விவகாரத்தில் தலையிட்டு விவசாய சங்கத்தினர் மற்றும் ஆலை முதலாளிகள் இணைந்த முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் மேல் கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மாற்றப்படவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications