கரும்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்
சென்னை: தமிழகம் முழுவதும் சர்க்கரை ஆலைகளுக்கு எதிராக கரும்பு விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டமானது சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கரும்பு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானத்தில், தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினரால் வழங்கப்பட வேண்டிய 1000 கோடி ரூபாய்க்கும் மேலான நிலுவைத் தொகையானது அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மாநில அரசால் அறிவிக்கப்பட்ட கூடுதல் விலையை வழங்கக் கோரியும் கடந்த 2 நாட்களாக கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசானது இவ்விவகாரத்தில் தலையிட்டு விவசாய சங்கத்தினர் மற்றும் ஆலை முதலாளிகள் இணைந்த முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் மேல் கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மாற்றப்படவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications