விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.. சென்னையில் ஏரிகளின் நிலை என்ன?
சென்னையில் நேற்று மாலையில் இருந்து கொடூரமாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி இருக்கின்றன.
Recommended Video

சென்னை: சென்னையில் நேற்று மாலையில் இருந்து கொடூரமாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி இருக்கின்றன. இதுவரை பெய்த மழை காரணமாக சென்னையில் இருக்கும் 16 ஏரிகளில் முக்கியமான ஏரிகள் அனைத்தும் பெருமளவில் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது. செம்பரம்பாக்கம் இன்னும் சில மணி நேரத்தில் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.
சென்னையின் 70 சதவிகிதமான இடங்களில் உயரமாக நீர் நிரம்பி இருக்கிறது. பெரும்பாலான இடங்கள் மொத்தமாக மூழ்கிவிட்டன. கடந்த 8 மணி நேரமாக சென்னையின் அனைத்து பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

16 ஏரிகள்
இந்த நிலையில் சென்னையை இரவு முழுக்க கொடூரமாக பெய்த இந்த மழை காரணமாக அங்கு இருக்கும் முக்கால்வாசி ஏரிகள் நிரம்பி இருக்கிறது. தற்போது செயல்படும் நிலையில் சென்னையில் 16 ஏரிகள் இருக்கின்றன. இதில் 5 ஏரிகளால் சென்னைக்கு பாதிப்பு வரலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

தாம்பரம் ஏரி
சென்னையின் தாம்பரம் பகுதிகளில் பெய்த கடுமையான மழையால் அங்கு உள்ள ஏரிகள் நிரம்பி இருக்கிறது. அங்கு இருக்கும் செம்பாக்கம் ஏரி மொத்தமாக நிரம்பி தண்ணீர் வெளியே வந்து கொண்டு இருக்கிறது. அந்த ஏரிக்கு பக்கத்தில் வீடு கட்டியவர்களின் வீடுகளுக்குள் வெள்ளம் சென்று இருக்கிறது.

கரையை உடைக்க முயற்சி
இதையடுத்து சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் ராஜகீழ்ப்பாக்கம் ஏரியும் நிரம்பி இருக்கிறது. நேற்று அந்த பகுதியில் தண்ணீர் அதிகம் ஆனதை அடுத்து சிலர் அந்த ஏரியின் கரையை உடைக்க முயன்று இருக்கிறார்கள். இது கடைசி நொடியில் தடுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த ஏரி தற்போது கொள்ளளவையும் தாண்டி நிரம்பி இருக்கிறது.

மேற்கு தாம்பரம் பாதிப்பு
இதேபோல பீர்க்கன்காரணை ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இந்த ஏரிக்கரையில் இருந்து பஸ் நிறுத்தம் வழியாக தண்ணீர் வெளியேறும் வகையில் கரை உடைபட்டு இருக்கிறது. இதன் காரணமாக மேற்கு தாம்பரம் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம் நிரம்பி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஏரிகள் நிரம்பும்
மேலும் சென்னையின் முக்கியமான ஏரிகளான புழல் ஏரியில் 672 மில்லியன் கன அடி நிரம்பி இருக்கிறது. இதன் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 679 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. செம்பரம்பாக்கம் இன்னும் சில நாட்களில் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications